எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார்...அதனால் அவர் பெரியார்... ஸ்டாலின் பதிவு!!
சென்னை: ''என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் . அதனால்தான் அவர் பெரியார் ''என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
கோயம்புத்தூரில் இருக்கும் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசி மர்ம நபர்கள் அவமரியாதை செய்து இருந்தனர். சம்பவம் அறிந்து அந்த இடத்திற்கு வந்து பெரியார் தொண்டர்கள், திகவினர், திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பதிவில், ''என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார். தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார். சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார் '' என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து கோயம்புத்தூரில் இருக்கும் 5 பெரியார் சிலைகளுக்கும், அம்பேத்கர் சிலைக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. என். கார்த்திக் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலைக்கு காவி சாயம்... அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்