'சின்னக் கலைவாணர்' விரைவில் குணமடைந்து.. கலைச்சேவையை தொடர வேண்டும்.. மு.க.ஸ்டாலின் ட்வீட்!
சென்னை: 'சின்னக் கலைவாணர்' விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விவேக் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு 'எக்மோ; உதவியுடன் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்' @Actor_Vivek அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன்.
— M.K.Stalin (@mkstalin) April 16, 2021
அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்.
விவேக்கின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், 24 மணி நேரம் அவரது உடல்நிலையை கண்காணிக்க வேண்டியதுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகர் விவேக் குணமடைய வேண்டிய பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வேண்டி வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நடிகர் விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், '' சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் 'சின்னக் கலைவாணர்'
நடிகர் விவேக் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன். அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications