Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திராவிட மாடல் குறித்த ஆளுநரின் பேச்சு..இப்படியே பேசிக்கொண்டு இருந்தால்..திமுக எம்பி ஆ.ராசா விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்களுக்கு அரசியல் சட்டத்தில் என்ன வேலை கொடுத்தார்கள்.. என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று ஆளுநரின் திராவிட மாடல் குறித்த பேச்சை விமர்சனம் செய்து திமுக எம்.பி ஆ.ராசா பேசினர்.

தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் உள்ளது. குறிப்பாக தமிழக சட்ட சபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

DMK MP A Raja criticizes Governors speech on Dravidian model

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்று விமர்சித்து இருந்தது தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் கருத்துக்களுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

திமுக அரசு பொறுப்பேற்று இரு ஆண்டுகள் முடிந்துள்ளது. இதையொட்டி திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இது குறித்து முதல்வர் கூறுகையில், "திராவிடம் என்பது காலாவதியான கொள்கை ஆளுநர் சொல்லி இருக்கிறார். ஆளுநருக்கு சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கை கிடையது. சனாதனம் உள்ளிட்டவற்றை காலாவதியாக்கியதுதான் திராவிடம். அந்நிய படையெடுப்பாக இருந்தாலும், ஆரிய படையெடுப்புகளாக இருந்தாலும், அதனை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம் எனவேதான் அதை பார்த்து ஆளுநர் பயப்படுகிறார்" என்று பேசியிருந்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்களுக்கு எதிராக திமுகவின் முக்கிய தலைவர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில், கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக கொள்கை பரப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவும் ஆளுநரின் கருத்தை கடுமையாக விமர்சித்தார். இது குறித்து ஆ.ராசா கூறியதாவது:-

திராவிட மாடல் பொய்த்து விட்டது என்று ஆளுநர் சொல்கிறார். அவர் எங்கே போய் பி.எச்.டி மெற்கொண்டார். நாடாளுமன்றத்தில் ஆளுநர் குறித்து சொன்னேன். அரசியல் சட்டத்தில் இருக்கிற ஒரு அறியாத மூடர் என்று சொன்னேன். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இதே மாதிரி பேசிக்கொண்டு இருந்தால் ஆளுநர் ரவியும் Constitutional Idiot ஆகி விடுவார். உங்களுக்கு அரசியல் சட்டத்தில் என்ன வேலை கொடுத்தார்கள்..என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள். ஆரிய மாடல் ரவி, திராவிட மாடல் நாங்கள்" விவாதத்திற்கு நான் தயராக இருக்கிறேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+