என்னாது புனித கங்கை நதி தமிழகத்தில் பாய்கிறதா?.. மத்திய அரசை கிண்டல் செய்து திமுக எம்பி ட்வீட்!
சென்னை: புனித கங்கை நதி தமிழகத்தில் பாய்கிறதா, எனக்குத் தெரியவில்லையே என திமுக எம்பி வில்சன் கேலியான ட்வீட்டை போட்டுள்ளார்.
மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்திலிருந்து பெறப்பட்ட பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி (சிஎஸ்ஆர்) எதற்காக செலவிடப்படுகிறது என திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சகம் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளது. அதில் கடந்த 3 ஆண்டுகளாக சமூக பொறுப்பு நிதியிலிருந்து 52 லட்சம் ரூபாய் கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சகத்தின் பதிலை திமுக மாநிலங்களவை எம்பி வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் தமிழகத்தில் கார்ப்பொரேட் சமூக பொறுப்பு நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு நிதியின் ஒரு பகுதி சுத்தமான கங்கை நிதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

புனித கங்கை நதி
புனித கங்கை நதி தமிழகத்தின் வழியாக பாய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சுமார் 915கோடி 2019-2020 ல் தமிழகத்தில் எப்படி செலவிடப்பட்டது என்ற கேள்விக்கு பதில் இல்லை! என வில்சன் தெரிவித்துள்ளார்.

சமூக பொறுப்பு நிதி
பெருநிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் சமூக பொறுப்பு நிதி அந்த நிறுவனங்கள் அமைந்திருக்கும் பகுதியில் சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த செலவிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் இந்த நிதி பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
|
தூய்மை
இந்த அறிவிப்புக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட சமூக பொறுப்பு நிதி கங்கை நதியை தூய்மைப்படுத்த செலவிடப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications