பேராசிரியர் அன்பழகன் 100வது பிறந்தநாள்! ஸ்டாலின் அரசியல் வானில் சிறகடித்து பறக்க அடித்தளமிட்ட ஆசான்!
சென்னை: திமுகவின் நீண்ட கால பொதுச்செயலாளராக இருந்து மறைந்த பேராசிரியர் க.அன்பழகனுக்கு இன்று நூறாவது பிறந்தநாள்.
இதையொட்டி ஓராண்டு முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நூற்றாண்டு விழா காணும் பேராசிரியர் அன்பழகன் குறித்த பின்னணியை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் கல்யாணசுந்தரம்- சொர்ணாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக 1922-ம் ஆண்டும் டிசம்பர் 19-ம் தேதி பிறந்தவர் அன்பழகன். பெற்றோர் சூட்டிய ராமையா என்ற பெயருடன் பள்ளிக்கல்வியை நிறைவு செய்த இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் முடித்தார். பெரியாரிடம் இருந்து சுயமரியாதை கொள்கையை கற்று அதை பின்பற்றத் தொடங்கிய அன்பழகன் தனித்தமிழ் மீது கொண்ட ஆர்வம் காரணமாக கல்லூரி பயின்ற காலத்தில் ராமையா என்ற தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார்.

பச்சையப்பன்
இளங்கலை முடித்த கையோடு அந்தக்காலத்திலேயே தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். இதையடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியை தொடங்கிய அவர், அவ்வப்போது அண்ணாவை சந்தித்து விட்டு செல்வார். அவ்வாறு அன்பழகன் வரும்போதெல்லாம். ''வாப்பா பேராசியர் தம்பி'' என அண்ணா வாஞ்சையோடு அழைத்தது மட்டுமல்லாமல், தன்னை சுற்றி இருக்கும் நிர்வாகிகளிடமும் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அன்று அண்ணா சூட்டிய பேராசிரியர் பட்டம் பின்னாளில் அவருக்கு தனிப்பெரும் அடையாளமாக மாறி ''இனமான பேராசியர் அன்பழகன்'' என அழைக்கப்பட்டு வந்தார்.

75 ஆண்டுகால நட்பு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கும் -மறைந்த பேராசிரியர் அன்பழகனுக்கும் ஏறத்தாழ 75 ஆண்டுகால நட்பு இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. இத்தனை ஆண்டுகளில் அவர்கள் இருவருக்கும் இடையே எத்தனையோ முறை கருத்து வேறுபாடுகள், மன வருத்தங்கள் ஏற்பட்ட போதிலும் ஒருவரை ஒருவர் பொதுமேடைகளிலோ, நிர்வாகிகள் மத்தியிலோ, அல்லது குடும்பத்தினரிடமோ விட்டுக்கொடுத்ததில்லை. அன்பழகனை தனது அண்ணனாகவே போற்றி வந்தார் கருணாநிதி. கருணாநிதியிடம் இருந்து அன்பழகனை பிரிப்பதற்காக பலமுறை சூழ்ச்சிகள் சூழந்த போதும் மனச்சிதைவின்றி கருணாநிதியுடன் இணைந்து பயணித்தார்.

சாந்த குணம்
கட்சி மற்றும் ஆட்சி தொடர்புடைய விவகாரங்களில் பேராசிரியர் அன்பழகனை பொறுத்தவரை தனது மனதில் பட்டதை துணிச்சலாக வெளிப்படையாக எடுத்துக்கூறக் கூடியவர். அதே சமயம் யார் மனதும் புண் படாதவாறு, வார்த்தைகளில் கவனம் செலுத்துவதில் மிகுந்த கண்ணும் கருத்துமாக இருப்பார். பொதுவாக நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் போது யாரிடமும் அதிர்ந்து பேசமாட்டார் அன்பழகன். சாந்தமாகவும், முகமலர்ச்சியாகவும் பேசுவது அன்பழகனின் சிறப்பு இயல்புகளில் முக்கியமான ஒன்று.

43 ஆண்டுகள்
கடந்த 1977-ம் ஆண்டு திமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற அவர், தனது வாழ்நாளின் இறுதி நொடி வரை 43 ஆண்டுகள் அந்தப் பதவியை அலங்கரித்துள்ளார். கட்சியின் மிக முக்கிய பொறுப்பான பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை மிக திறமையாக கையாண்டு, விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து கட்சித் தொண்டர்கள் அனைவருக்குமான ஆசானாக இருந்திருக்கிறார் அன்பழகன்.

5 தலைமுறைகள்
அரசியலில் பெரியார் தொடங்கி அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என 5 தலைமுறைகளை கண்டவர். குறிப்பாக மு.க.ஸ்டாலின் இன்று அரசியல் வானில் சிறகடித்து பறக்கிறார் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர் பேராசிரியர் அன்பழகன் தான். ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ.சீட் கொடுக்கவும், கட்சிப்பதவி கொடுக்கவும் கருணாநிதி ஆரம்பத்தில் தயங்கிய போது ஸ்டாலினுக்காக வாதாடி வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தவர்களில் பேராசிரியர் அன்பழகன் பிரதான இடத்தில் இருக்கிறார்.

சட்டமன்றம்
பேராசிரியர் அன்பழகனின் பேச்சை பொறுத்தவரை வழவழ கொழ கொழ வென இருக்காது. கூற வருவதை நேர்த்தியான மொழி நடையில் சிறு பிசிரின்றி பேசக்கூடியவர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சட்டமன்றத்தில் இவர் ஆற்றிய உரைகளை ஜெயலலிதா முழு கவனத்துடன் கேட்பார். அந்தளவு நாகரிகத்துடன் கண்ணியம் பிறழாமல் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் பேராசிரியர் அன்பழகன்.
-
நடிகர் போஸ் வெங்கட் சர்ச்சை.. அறந்தாங்கி தொகுதியில் சீட் கேட்டு காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications