டி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா; மருத்துவமனையில் இருந்து துரைமுருகன் டிஸ்சார்ஜ்
சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மகன் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சட்டசபை தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்ற வேட்பாளர்கள், தலைவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஶ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதராவ் கொரோனாவுக்கு பலியாகினார். இந்த நிலையில் அடுத்தடுத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
எனது தந்தையார் திரு டிஆர்பாலு அவர்களுக்கு #கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது.
— T R B Rajaa (@TRBRajaa) April 14, 2021
கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
துரைமுருகனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் தினமும் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று துரைமுருகன், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். இதனால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இதனிடையே திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி. ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், எனது தந்தையார் திரு டிஆர்பாலு அவர்களுக்கு #கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.