தமிழகத்தில் 36 இடங்களில் திமுக முன்னிலை.. குத்தாட்டம் போட்டு குபீர் கொண்டாட்டத்தில் திமுக!
Recommended Video
சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 38 மக்களவை தொகுதிகளில் திமுக 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
நாடு முழுவதும் 17 -ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
தமிழகத்தில் 10 இடங்களில் திமுக முன்னிலை.. அறிவாலயத்தில் குத்தாட்டத்தில் தொண்டர்கள் #DMK #ElectionResultswithOneindia #ElectionResults2019 #LokSabhaElection2019 (link: https://t.co/97xY3yr6yn) pic.twitter.com/YkL5oojYs2
— Oneindia Tamil (@thatsTamil) May 23, 2019

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணத் தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள 18 லட்சம் தபால் வாக்குகளில் பதிவான வாக்குகளில் 16 லட்சம் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நுண் பார்வையாளர்களும் தேர்தல் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

திமுக மொத்தம் 36 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

இதில் நாமக்கல்லில் திமுக சார்பில் போட்டியிட்ட கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ், காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வம், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி, நீலகிரி ஆ ராசா, ஸ்ரீபெரும்புதூர் டிஆர் பாலு, அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications