வாக் அவுட் கொடுத்த உதயநிதி! நடுநிலை வகித்த பாஜக, பாமக எம்.எல்.ஏ.க்கள்! சட்டசபையில் சுவாரசியம்
சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் வாக்கெடுப்பை திமுக புறக்கணித்து வெளியேறிய நிலையில், பாமக, பாஜக, எம்எல்ஏக்கள் நடுநிலை வகிப்பதாக கூறினர்.
தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான சி. ஜோசப் விஜய் முன்மொழிந்தார். தவெகவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து உறுப்பினர்கள் உரையாற்றினர்.

தமிழக சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முதல்முறையாக நேரலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நம்பிக்கை குரல் வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்த நிலையில் மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் ஆதரவை தெரிவித்தன.
தொடர்ந்து சௌமியா அன்புமணி வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்தார். விஜய் கோரிய தீர்மானத்தை எதிர்ப்பதாக பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவித்தனர். தொடர்ந்து சட்டசபையில் எண்ணிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் அறிவித்தார்.
இந்த நிலையில் திமுக வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன நிலையில் திமுக உறுப்பினர்கள் வெளியேறினர். அதே நேரத்தில் தீர்மானத்தை எதிர்ப்பதாக சொல்லி அதிமுக எடப்பாடி அணியினர் சட்டசபையில் இருந்தனர். அதே நேரத்தில் தீர்மானத்தில் நடுநிலை வகிப்பதாக பாமகவின் நான்கு உறுப்பினர்களும், பாஜகவின் ஒரு உறுப்பினரும் அவையில் அமர்ந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications