"செக் மேட்!" விறுவிறு ஒலிம்பியாட் பணிகள்.. ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த உதயநிதி! செஸ் விளையாடி அசத்தல்
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாகச் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செஸ் ஒலிம்பியாட்
இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். உலகெங்கும் உள்ள 187 நாடுகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த செஸ் தொடரில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் சர்வதேச வீரர், வீராங்கனைகள் கடந்த சில நாட்களாகவே சென்னை வரத் தொடங்கிவிட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி
வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் வீரர், வீராங்கனைகள் தங்க மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை சாலை மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்றன. செஸ் ஒலிம்பியாட் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கப் போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

முன்னோட்டம்
ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நேற்றைய தினம் அதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு முன்னோட்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மொத்தம் 1414 வீரர்கள் செஸ் விளையாடினர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி செஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறை. இது "நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டில்" இடம் பெற உள்ளது.

உதயநிதி
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் எம்எல்ஏவுமாந உதயநிதி திடீரென விசிட் அடித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு முன்னோட்டமாக நடத்தப்பட்ட நிகழ்விலும் உதயநிதி கலந்து கொண்டு கலக்கலாக செஸ் விளையாடினார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

ஆய்வு
செஸ் ஒலிம்பியாட் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். உதயநிதி அங்கு வந்திருப்பதைக் கண்ட மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும், அவருடன் செல்பியும் எடுத்துக் கொண்டனர். அப்போது அமைச்சர்கள் மெய்யநாதன். த.மோ.அன்பரசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

தமிழக அரசு
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளைப் பிரபலப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடங்கும் ஜூலை 28ஆம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்தும் வகையில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் "வெல்கம் டூ நம் ஊரு சென்னை" என்ற பாடலும் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து இலவச பேருந்துகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
Recommended Video

சென்னையில் எப்படி
முதலில் இந்தப் போட்டிகள் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் தான் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடைபெற இருந்த பல சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டதைப் போலவே செஸ் ஒலிம்பியாட் தொடரும் ரத்து செய்யப்பட்டது. அப்போது தான் இந்த வாய்ப்பை சென்னை பெற்றது. அதன் பின்னர் வெறும், சில மாதங்களில் இதற்கான அனைத்து பணிகளையும் கச்சிதமாக நடத்தி முடித்துள்ளது தமிழக அரசு
-
15 நாட்களில் 25 கொலைகள்.. இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? விஜய்யை கடுமையாக விமர்சித்த உதயநிதி -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications