புளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்!
எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியது திமுக பிரமுகர் என்பது தெரியவந்துள்ளது
சென்னை: தோசை மாவு பாக்கெட் விவகாரத்தில் திமுகவின் பெயர் அடிபட்டுள்ளது. .. எழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியது திமுக நிர்வாகி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேத்து ஜெயமோகன் தோசை மாவு ஏன் புளிச்சு போச்சு என்று கடைக்காரர் கீதாவிடம் கேட்க.. அதற்கு கீதாவின் கணவர் செல்வம் ஜெயமோகனை தாக்கினார்.
இது போலீஸ் ஸ்டேஷன் வரை விவகாரமாக போய்விட்டது. நேசமணி நகர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து, செல்வத்தை கைது செய்தனர். இதற்கு பிறகுதான் விஷயமே ஆரம்பமாகி உள்ளது

மகேஷ்
அதாவது கீதாவின் கணவர் செல்வம் திமுகவைச் சேர்ந்தவராம். திமுக 17வது வட்டப் பிரதிநிதியாக இருக்கிறாராம். இதனால் காவல் நிலையத்துக்கு செல்வத்தை கூட்டிக் கொண்டு வந்த பிறகு கட்சிக்காரர்கள் படையெடுத்துள்ளனர். வக்கீல்களும் வந்துள்ளனர். திமுக நகரச் செயலாளர் மகேஷ் என்பவரும் வந்து ஜெயமோகனிடம் பேசியுள்ளார். ஆனால் அடி வாங்கியது பிரபல எழுத்தாளர் என்பதால் மகேஷ் மூச்சுக் காட்டாமல் திரும்பி விட்டாராம்.

செல்வம்
அடித்தவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதால்தான் பாஜகவைச் சேர்ந்த எச். ராஜா டிவீட் போட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பந்தமாக செல்வம் சொல்லும்போது,"நேத்து கொஞ்சம் போதையில் இருந்துட்டேன்.."என்று காரணம் சொன்னாலும், கை நீட்டி அடிப்பது என்பது ஏற்க முடியாத ஒன்று. இந்த செல்வம் மீது அப்பகுதி மக்களும் கூட அதிருப்தியா உள்ளனராம். வாய் ஜாஸ்தி, கை நீளம் என்று சொல்கிறார்கள்.

ஆபாசமாக பேசினர்
அதுமட்டுமில்லை.. இதுபோன்ற அராஜகங்களில் ஈடுபட்டு வருவது திமுகவுக்கு கெட்ட பெயரையே சம்பாதித்து தருகிறது. தோசை மாவு விஷயத்துக்குகூட ஒரு பிரபலமான எழுத்தாளரை கை நீட்டி அடிப்பது, அவர் வீட்டுக்குப் போய் பெண்களை ஆபாசமாக பேசுவது, இப்படி கேடு கெட்டத்தனமாக நடந்து கொண்ட ஒருவருக்கு ஆதரவாக திமுக பிரமுகர் சப்போர்ட்டுக்கு வருகிறார் என்றால் கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

அடிதடிகள்
ஆட்சி கவிழ்ப்பு, அடுத்த ஆட்சி நாமதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் பியூட்டி பார்லர், பிரியாணி கடை தாக்குதல்களும், தோசை மாவுக் கடை அடிதடிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கெட்ட பெயர்
மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில், அவ்வப்போது, திமுகவை சேர்ந்த ஒருசில நபரால்தான் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றாலும், இவையெல்லாம் ஒரு நாள் ஒட்டுமொத்தமாக வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நின்று நடுத்தர வர்க்க மக்களிடையே பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும். செல்வத்தை உடனடியாக கட்சியை வீட்டு நீக்குவதோடு கடுமையான கண்டனத்தையும் திமுக தலைமை தெரிவித்தால் நல்லது.
-
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
செம ஷார்ப்..வேட்பாளர் பட்டியலை பார்த்து பார்த்து செதுக்கிய ஸ்டாலின்! திமுகவில் ஓங்கிய உதயநிதியின் கை -
ரூ.2000 ஆக உயர்த்தப்படும் மகளிர் உரிமைத் தொகை.. மாணவிகளுக்கு இனி ரூ.1500! ஸ்டாலின் வாக்குறுதி! -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
ஸ்டாலினின் ரூ. 8000 கூப்பன் Vs எடப்பாடியின் இலவச Fridge திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. திமுக அளித்த மேஜர் வாக்குறுதி! -
DMK Manifesto: முதியோர் உதவித்தொகை இனி ரூ. 2 ஆயிரமாக உயர்வு.. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம்










Click it and Unblock the Notifications