எஸ்பிஐயில் அக்கவுண்ட் வச்சிருக்கீங்களா.. இப்படி மெசேஜ் வந்தால் உஷாரா இருங்க.. மத்திய அரசு வார்னிங்
சென்னை: கடந்த சில தினங்களாக எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் வாயிலாக மெசேஜ் வருவதாக சொல்லப்படுகிறது. அந்த மெசேஜில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டு, அதை கிளிக் செய்தால் ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது போன்ற மெசேஜ்கள் வந்தால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசின் பேக்ட் செக் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பேங் ஆப் இந்தியா. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் முன்னணி வங்கியாக தகிழ்கிறது. இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் எஸ்பிஐ வங்கியின் கிளைகள் உள்ளன. எஸ்பிஐ வங்கி தன்னுடைய அபரிமிதமான சேவையால், ஏராளமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது..

எஸ்பிஐ வங்கி: அதேபோல, தன்னுடைய கஸ்டமர்களின் வசதிக்காக பல்வேறு ஆன்லைன் சேவைகளையும் எஸ்பிஐ தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது இணைய வழியிலான பரிவர்த்தனைகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால், பெரும்பாலானவர்கள் வங்கி பக்கமே செல்வது இல்லை. அனைத்து சேவைகளையும் ஆன்லைன் பரிவர்த்தனையிலேயே முடித்து விடுகிறார்கள்.
வாட்ஸ் அப்பில் மெசேஜ்: கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு சேவைகளை பயன்படுத்தும் போது ரிவார்ட் பாயிண்டுகளும் சில சமயம் வழங்கப்படுகின்றன. இந்த பாயிண்டுகளை பயன்படுத்தி தள்ளுபடியில் பொருட்களை வாங்கி கொள்ள முடியும். ஆனால், டெக்னாலஜி பெருக பெருக மோசடி பேர்வழிகளின் திருட்டு சம்பங்களும் நூதன வழியில் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த ரீவார்டு பாயிண்டுகளை பெற மக்களும் ஆர்வம் காட்டுகின்றன.
எனவே இந்த தந்திரத்தை பயன்படுத்தி அதன் மூலமாக மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பணம் சம்பாதிக்க முயற்சிகள் மேற்கொள்கின்றனர். அதாவது பரிசு விழுந்திருக்கிறது, பணம் கிடைத்துள்ளது போன்ற காரணங்களை சொன்னால் யாரும் லிங்கை கிளிக் செய்ய மாட்டார்கள் என்பதால் தற்போது மோசடி கும்பலினர் ரிவார்டு பாயிண்டு முறையை கையில் எடுத்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் வாயிலாக இதுபோன்ற மெசேஜ் வருவதாக சொல்லப்படுகிறது.
லிங்கை கிளிக் செய்தால்: அதாவது எஸ்பிஐ வங்கியின் பெயரில் போலியாக அனுப்பப்படும் இந்த மெசேஜில், ரீவார்ட் பாயிண்டுகள் உங்களுக்கு இருப்பதாகவும் இன்றைக்குள் கலாவாதி ஆகிவிடும். இந்த பாயிண்டுகளை பெற இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதை கிளிக் செய்தால் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு அதன் மூலம் வங்கி கணக்கில் உள்ள பணம் அபேஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது.
கவனமாக இருக்கவும்: எனவே, தான் மத்திய அரசின் பேக்ட் செக் இது தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து போலி மேசேஜ் அனுப்பப்படுகிறது. எஸ்பிஐ ரிவார்டு பாயிண்ட் என்ற பெயரில் ஏபிகே ஃபைல்களை டவுன்லோடு செய்ய சொல்லி மெசெஜ் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். எஸ்பிஐ இப்படி மெசெஜ் அனுப்புவதில்லை. எனவே கவனமாக இருக்கவும்” என்று தெரிவித்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications