நேர்மையின்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு சிறைகளை தயார் செய்து வருகிறார் மோடி.. வெங்கையா நாயுடு
சென்னை: இளைஞர்கள் தான் நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.

திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் பாரம்பரியத்தை அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டது பற்றிய நூலை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர் இளம் தலைமுறையினர் நாட்டிலுள்ள புராதான, வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் முன்வர வேண்டும் என்றார்.
இந்து என கூற பலரும் ஏன் தயங்குகின்றனர் என கேள்வி எழுப்பிய வெங்கையா நாயுடு, நாட்டில் வாழும் 80 சதவீத மக்கள் இந்துக்கள் தானே பின் எதற்கு தயக்கம் என்றார்.
நம் புராதானங்கள், இதிகாசங்களை குழந்தைகளுக்கு கற்று தர வேண்டும். அது மட்டுமல்லாமல் வரலாற்றை அறியும் ஆர்வத்தையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். நம் நாடு வளம் நிறைந்த நாடு, வெளிநாட்டு அறிஞர்கள் கூட நம் நாட்டின் பெருமைகளை பற்றிய நிறைய எழுதி உள்ளனர்.
தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி. தாய்மொழியை மறக்காமல் இருக்க வேண்டும். தாய்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும், எந்த மொழியையும் யார் மீதும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதே போல எந்த மொழியையும் யாரும் எதிர்க்கவும் கூடாது என வலியுறுத்தினார்.
நாட்டில் நேர்மையின்றி பலர் பணம் சம்பாதித்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் மோடி, சிறைகளை தயார் செய்து வருவதாக பேசினார் வெங்கையா நாயுடு.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications