நேர்மையின்றி பணம் சம்பாதிப்பவர்களுக்கு சிறைகளை தயார் செய்து வருகிறார் மோடி.. வெங்கையா நாயுடு
சென்னை: இளைஞர்கள் தான் நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார்.

திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலின் பாரம்பரியத்தை அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டது பற்றிய நூலை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். பின்னர் தொடர்ந்து பேசிய அவர் இளம் தலைமுறையினர் நாட்டிலுள்ள புராதான, வரலாற்று சின்னங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் முன்வர வேண்டும் என்றார்.
இந்து என கூற பலரும் ஏன் தயங்குகின்றனர் என கேள்வி எழுப்பிய வெங்கையா நாயுடு, நாட்டில் வாழும் 80 சதவீத மக்கள் இந்துக்கள் தானே பின் எதற்கு தயக்கம் என்றார்.
நம் புராதானங்கள், இதிகாசங்களை குழந்தைகளுக்கு கற்று தர வேண்டும். அது மட்டுமல்லாமல் வரலாற்றை அறியும் ஆர்வத்தையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். நம் நாடு வளம் நிறைந்த நாடு, வெளிநாட்டு அறிஞர்கள் கூட நம் நாட்டின் பெருமைகளை பற்றிய நிறைய எழுதி உள்ளனர்.
தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி. தாய்மொழியை மறக்காமல் இருக்க வேண்டும். தாய்மொழிக்கு மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும், எந்த மொழியையும் யார் மீதும் கட்டாயப்படுத்தக் கூடாது. அதே போல எந்த மொழியையும் யாரும் எதிர்க்கவும் கூடாது என வலியுறுத்தினார்.
நாட்டில் நேர்மையின்றி பலர் பணம் சம்பாதித்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் மோடி, சிறைகளை தயார் செய்து வருவதாக பேசினார் வெங்கையா நாயுடு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications