Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேங்க் அக்கவுண்ட் இருக்கா? சென்னை வங்கியில் மொத்த பணத்தை காணோமாம்.. ஒரே நாளில் எப்படி மாயம்? அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் நடந்த 3 சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு தந்து வருகிறது. என்ன நடந்தது?

நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு உபயோகமாகிறதோ, அதே அளவுக்கு மோசடிகளுக்கும் உருவாக்கிவிடுகிறது.. அதனால்தான் பொதுமக்களுக்கு, நம்முடைய காவல்துறை எந்நேரமும் விழிப்புணர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கியபடியே உள்ளது.

Bank Account Chennai Online Business

அதேபோல, பிரபல வங்கிகளின் பெயர்களை சொல்லியும், மோசடி வேலைகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்று வங்கிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

வங்கி விவரங்கள்: அதுமட்டுமல்ல, யாரிடமும் வங்கி விவரங்களை பகிர வேண்டாம் என்றும் மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்றும் வங்கிகள் வார்னிங் தந்து வருகின்றன. மற்றொருபக்கம் பக்கம் சைபர் கிரைம் போலீசாரும், பொதுமக்களை அலர்ட் செய்து வருகிறார்கள்..

எந்த வங்கியிலிருந்தும், ஒருபோதும் ஓடிபி-யை யாருமே கேட்க மாட்டார்கள். அதனால், யாராவது உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. அவர்களது இணைப்பையும் துண்டித்துவிடுங்கள் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.. இவ்வளவு அறிவுறுத்தியும்கூட, சென்னையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

மர்ம கும்பல்: சென்னை கொளத்தூரை சேர்ந்த கிரி பிரசாத் என்பவருக்கு, மர்ம கும்பல் ஒன்று போன் செய்துள்ளது.. தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, உலர் பழங்கள் பிசினஸ் செய்தால், லாபம் அதிகமாக கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளை சொல்லி உள்ளனர்.

இறுதியில், கிரி பிரசாத் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை வாரி சுருட்டியுள்ளது அந்த கும்பல்.. இதேபோல, ராஜமங்கலம் பகுதியில் ஆகாஷ் என்பவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.58 ஆயிரமும், அமைந்தகரை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவரிடமிருந்து ரூ.70 ஆயிரம் பணமும் சுருட்டியிருக்கிறது.

ஒரே நாள் அதிர்ச்சி: ஒரே நாளில் இந்த 3 அபேஸ் சம்பவங்கள் நடந்துள்ளன.. பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக போலீசில் புகார் தந்தார்கள்.. இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகள் வடமாநிலங்களிலிருந்து நெட்வொர்க் அமைத்து அரங்கேற்றப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 3 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக, ஆன்லைன் மோசடிக்கும்பல் பணத்தை எடுத்திருப்பது சென்னையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+