பேங்க் அக்கவுண்ட் இருக்கா? சென்னை வங்கியில் மொத்த பணத்தை காணோமாம்.. ஒரே நாளில் எப்படி மாயம்? அலர்ட்
சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் நடந்த 3 சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை மக்களுக்கு தந்து வருகிறது. என்ன நடந்தது?
நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு உபயோகமாகிறதோ, அதே அளவுக்கு மோசடிகளுக்கும் உருவாக்கிவிடுகிறது.. அதனால்தான் பொதுமக்களுக்கு, நம்முடைய காவல்துறை எந்நேரமும் விழிப்புணர்வுகளையும், அறிவுரைகளையும் வழங்கியபடியே உள்ளது.

அதேபோல, பிரபல வங்கிகளின் பெயர்களை சொல்லியும், மோசடி வேலைகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்று வங்கிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.
வங்கி விவரங்கள்: அதுமட்டுமல்ல, யாரிடமும் வங்கி விவரங்களை பகிர வேண்டாம் என்றும் மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்றும் வங்கிகள் வார்னிங் தந்து வருகின்றன. மற்றொருபக்கம் பக்கம் சைபர் கிரைம் போலீசாரும், பொதுமக்களை அலர்ட் செய்து வருகிறார்கள்..
எந்த வங்கியிலிருந்தும், ஒருபோதும் ஓடிபி-யை யாருமே கேட்க மாட்டார்கள். அதனால், யாராவது உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. அவர்களது இணைப்பையும் துண்டித்துவிடுங்கள் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.. இவ்வளவு அறிவுறுத்தியும்கூட, சென்னையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மர்ம கும்பல்: சென்னை கொளத்தூரை சேர்ந்த கிரி பிரசாத் என்பவருக்கு, மர்ம கும்பல் ஒன்று போன் செய்துள்ளது.. தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, உலர் பழங்கள் பிசினஸ் செய்தால், லாபம் அதிகமாக கிடைக்கும் என்று ஆசைவார்த்தைகளை சொல்லி உள்ளனர்.
இறுதியில், கிரி பிரசாத் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை வாரி சுருட்டியுள்ளது அந்த கும்பல்.. இதேபோல, ராஜமங்கலம் பகுதியில் ஆகாஷ் என்பவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.58 ஆயிரமும், அமைந்தகரை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவரிடமிருந்து ரூ.70 ஆயிரம் பணமும் சுருட்டியிருக்கிறது.
ஒரே நாள் அதிர்ச்சி: ஒரே நாளில் இந்த 3 அபேஸ் சம்பவங்கள் நடந்துள்ளன.. பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக போலீசில் புகார் தந்தார்கள்.. இந்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற மோசடிகள் வடமாநிலங்களிலிருந்து நெட்வொர்க் அமைத்து அரங்கேற்றப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 3 பேரிடம் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக, ஆன்லைன் மோசடிக்கும்பல் பணத்தை எடுத்திருப்பது சென்னையில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications