Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுப்பொலிவுடன் தயாராகி வரும் கிண்டி ரயில் நிலையம்! முழு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் சென்னை கிண்டி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன என்றும் தற்போது வரை 50 சதவீத பணிகள் நடந்துள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் 116 ரயில் நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த 116 இல் சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் உள்ளன. அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

chennai guindy railway

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் மறுமேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இவற்றில் ஒன்றுதான் கிண்டி ரயில் நிலையம் . இங்கு பல்வேறு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. கிண்டியில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம், செல்லம்மாள் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளும் ஸ்பிக், மாருதி உள்ளிட்ட நிறுவனங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு மின்சார ரயிலில் வந்து செல்வோருக்கு கிண்டி ரயில் நிலையம் வரப்பிரசாதமாக இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் கிண்டி ரேஸ் கோர்ஸ், கிண்டி தேசிய பூங்கா, தொழில் பூங்கா, காந்தி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்வோருக்கு உதவியாக கிண்டி ரயில் நிலையம் உள்ளது. இங்கு தினசரி சராசரியாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த ரயில் நிலையம் ரூ 13.50 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.

இந்த ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வசதியாக புதிய டிக்கெட் பதிவு அலுவலகம் அமைக்கப்படுகிறது. ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளுக்கு வசதியாக நடைமேடைகள் மேம்படுத்தப்படவுள்ளன. ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் உள்ள பழைய கூரைகளை அகற்றிவிட்டு புதியது அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், ஆகியோர் எளிதாக வந்து செல்லும் வகையில் 3 லிப்ட்கள் வைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. 1, 2, ஆவது நடைமேடைகளில் லிப்ட் வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது வரை 50 சதவீத பணிகள் நடந்து வருகின்றன. வரும் செப்டம்பரில் இந்த ரயில் நிலையம் தயாராகிவிடும் என தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+