Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேத்தீஸ்வரன் போண்டா மணி ஆனது ஏன்? பின்னணியில் கவுண்டமணி.. இப்படி ஒரு பிளாஷ்பேக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேத்தீஸ்வரன் என அழைக்கப்பட்ட போண்டா மணிக்கு அந்த பெயர் எப்படி ஏன் வந்தது தெரியுமா, இதன் பின்னால் இருக்கும் சோகமான பின்னணி என்ன?

இந்த 2023 ஆம் ஆண்டு எந்த நேரத்தில் பிறந்ததோ தெரியவில்லை. தங்களது கஷ்ட காலத்திலும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடியன்கள் சிலர் இறந்துவிட்டனர். அதிலும் அவர்கள் காமெடியன்கள் என்பதை விட மனிதம் உள்ளவர்கள் என சொல்லலாம்.

Do you know how Bonda Mani gets this name?

அந்த வகையில் மயில்சாமி, மனோபாலா வரிசையில் போண்டா மணியும் காலமாகிவிட்டார். இலங்கையை சேர்ந்தவர் போண்டா மணி. இவரது தனித்துவ நடிப்பு, அப்பாவித்தனமான பேச்சு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார். இவர் வடிவேலு, விவேக் ஆகியோருடன் இணைந்து காமெடியில் நடித்துள்ளார். இவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவருக்கு தமிழக அரசு உதவி செய்தது. அத்துடன் சில நடிகர்களும் அவருடைய சிகிச்சைக்கு பண உதவி செய்தனர். இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள்.

போண்டா மணியின் மகளுக்கு ஐசரி கணேஷ் தனது கல்லூரியில் இலவசமாக படிக்க சீட்டு கொடுத்துள்ளார். போண்டா மணியின் மனைவி மாற்றுத் திறனாளி. அவர் பெயர் மாதவி. இந்த நிலையில் போண்டா மணி மட்டுமே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் இருந்தது. அடிக்கடி வாய்ப்பு கொடுத்து வந்த விவேக்கும் மறைந்துவிட்டார். வடிவேலை எடுத்துக் கொண்டால் அவருக்கே வாய்ப்பில்லை என்கிறார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு சில நிகழ்ச்சிகளில் போண்டா மணி கலந்து கொண்டு வருமானம் ஈட்டி வந்தார். அண்மையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் வீட்டுக்குள்ளேயே ஓய்வெடுத்திருந்தார். நேற்று முன் தினம் நள்ளிரவு அவருக்கு திடீரென குளிர் காய்ச்சல் வந்தது.

இதையடுத்து மயங்கி கீழே விழுந்த போண்டா மணியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சீசர் மனோகரன், பெஞ்சமின் நடிகர் செந்தில், முத்துக்காளை உள்ளிட்டோர் போண்டா மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் போண்டா மணிக்கு அந்த பெயர் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. போண்டா மணியின் ஒரிஜினல் பெயர் கேத்தீஸ்வரன், அவர் சிங்கப்பூரில் வேலை பார்த்த போது அங்கு ஒரு நிகழ்ச்சிக்காக பாக்யராஜ் வந்தார். அப்போது போண்டா மணிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டு சினிமாவில் நடிக்க சென்னை வந்தார். ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் சிறிய வேடங்களில் நடித்த இவருக்கு வருமானம் போதிய அளவில் கிடைக்கவில்லை.

ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் கையில் கிடைக்கும் காசில் சாப்பாடு வாங்குவதற்கு பதிலாக போண்டாவை மட்டுமே வாங்கி சாப்பிட்டு பசியை ஆற்றி கொண்டாராம். தனது குருநாதர் கவுண்டமணியில் உள்ள மணியுடன் தனது பசி தீர்த்த போண்டாவை சேர்த்து போண்டா மணி என மாற்றி கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+