முடிஞ்சது டைம்.. ஆதார் கார்டு + பான் கார்டு லிங்க்.. ஆமா, ஆதார் இணைப்பை சரிபார்ப்பது எப்படி தெரியுமா
சென்னை: பான் கார்டையும் ஆதார் அட்டையையும் இணைக்க நேற்றே கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்த நிலையில், அதற்கான காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டது. இதுவரை எந்த அறிவிப்பும் கால நீட்டிப்பு குறித்து வெளியாகவில்லை.
நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் ஒன்று, பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன..
காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டு இருக்கும்.
பான் கார்டு: நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம், ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இப்படி இணைப்பதற்கு, நிறைய காலக்கெடு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிறது.. ஆனால் இந்த இணைப்பு குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், பலரும் இதை செய்யவில்லை... அதனால்தான், ஜூன் 30ம் தேதி வரை மறுபடியும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.. இப்படி கால அவகாசம் நீட்டிக்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும்.

அபராதம்: இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஆதார், பான் கார்டை இணைப்பவர்கள் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தபடியே, இதற்கு மேல் கால அவகாசம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நேற்றுடன் கெடுவும் முடிந்துவிட்டது.
நேற்றைய தினம் ஆதார் - பான் இணைக்காதவர்களுக்கு இன்று முதல் பான் கார்டு, செயலிழந்துவிடும். இன்று முதல் சம்பந்தப்பட்ட நபரால் பரிவர்த்தனைகளின்போதும், வருமான வரி சார்ந்த விஷயங்களிலும் பான் எண்ணை குறிப்பிட முடியாது.
ஆதார் - பான் இணைக்காவிட்டால் என்னாகும்:
- அதுமட்டுமல்ல, வருமான வரித்தாக்கல் செய்ய முடியாது.
- நிலுவையில் உள்ள வருமான வரி படிவங்கள் செயல்படுத்தப்படாது.
- நிலுவையில் உள்ள வருமான வரி ரீஃபண்ட் தொகை வராது.
- பான் செயலிழந்துவிட்டால் அதிக டிடிஎஸ் (TDS) வரி வசூலிக்கப்படும்.
வெப்சைட்: அதேபோல, பான் கார்டு பயன்படுத்தும் பலரும், தங்களது பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டோமா? இல்லையா? என்ற சந்தேகம் எழுவது இயல்பு.. இப்படி சந்தேகம் இருந்தால், நாமே நேரடியாக கிளியர் செய்து கொள்ளலாம்.
வருமான வரித்தளத்திற்கு சென்று Profile Settings என்பதை கிளிக் செய்து, Pfofile settingsல் Link aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.. அப்போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது என்று வரும். இதன் மூலம் பயனாளிகள் தங்கள் நிலையை அறிந்து கொள்ளலாம்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications