காலம் எவ்வளவு வேகமாக சுழலுது பார்த்தீங்களா? அன்று கரு நாகராஜன்.. இன்று சரத்குமார்!
சென்னை: சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து கரு நாகராஜனை நீக்கிய சரத்குமார் இன்று அதே நாகராஜன் மாநில துணைத் தலைவராக உள்ள பாஜகவில் சாதாரண உறுப்பினராக இணைந்துள்ளார். இதுதான் காலம் எவ்வளவு வேகமா சுழலுது என்பதற்கு உதாரணமாகும்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கடந்த 2016ஆம் ஆண்டு அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கரு நாகராஜனை கட்சியிலிருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து கரு நாகராஜனும் பாஜகவில் இணைந்து இன்று பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கிறார்.

பாஜகவில் தேசிய தலைவராக இருந்த அமித்ஷாவை சந்தித்து ஆசி பெற்று மத்திய இணையமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கரு நாகராஜன் இணைந்தார். அது போல் அவருடன் அவருடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இணைந்தனர்.
அப்போது கரு நாகராஜன் கூறியதாவது: நாங்கள் 9 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்து பாடுபட்டோம். சரத்குமார் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருக்கிறார். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில்லை, இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் இல்லை. பெரும்பான்மை மக்களின் குறைகளுக்கு தீர்வு காண வழி இல்லாத நிலையில்தான் இருந்து கொண்டிருந்தோம்.
எனவே நாங்கள் சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டோம். இவ்வாறு தெரிவித்திருந்திருந்தார். இதையடுத்து சாதாரண தொண்டராக வந்த கரு நாகராஜன் இன்று பாஜக மாநில துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். அவரும் அக்கட்சியில் இருந்தவர்களும் பாஜகவில் இணைந்துவிட்டனர். அண்ணாமலை தலைமையில் இதெல்லாம் நடந்தது. சரத்குமாருக்கு விரைவில் ஏதாவது ஒரு பதவி கொடுக்கப்படும் என தெரிகிறது. இல்லாவிட்டால் தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நேற்று முன் தினம் வரை பாஜகவுடன் கூட்டணி பேசி வந்த சரத்குமார் இன்று மொத்தமாக கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்ததைவிட ஒரு ஆச்சரியம் இருக்கிறது தெரியுமா. அதாவது அன்று கரு நாகராஜனை சரத்குமார் கட்சியை விட்டே நீக்கிவிட்டார். ஆனால் இன்று அதே கரு நாகராஜன் மாநில துணைத் தலைவராக உள்ள ஒரு கட்சியில் சரத்குமார் சாதாரண தொண்டனாக இணைந்துள்ளார்.
இதுதான் காலம் எவ்வளவு வேகமாக சுத்துது என்பதற்கான உதாரணம். சூர்யவம்சம் படத்தில் ஆட்சியரான தேவயானியை பிரியா ராமன் சந்திப்பார். அப்போது சரத்குமார் படிக்கவில்லை என்பதற்காக அவரை திருமணம் செய்ய பிரியா ராமன் மறுத்துவிடுவார். அதை குத்திக் காட்டிய தேவயானி "காலம் எவ்வளவு வேகமா சுழலுது பார்த்தீர்களா? அன்று அவர் படிக்கவில்லை என உதாசினப்படுத்தினீங்க, இன்று படித்த உங்க கணவருக்காக வேலை கேட்டு வந்திருக்கீங்களே என்பார். தற்போது அதே நிலைதான் சரத்குமாருக்கும்!
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications