மேட்டரே வேறயாம்! அதிமுக "பை-லா" என்ன சொல்லுது? புதிய பதவி சாத்தியமா? பொதுக் குழு எதற்காக கூடுகிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக் குழுக் கூட்டம் ஏன் கூடுகிறது? அந்த கூட்டத்தில் எது குறித்து பேசப்படவுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.

அதிமுகவில் ஒற்றை தலைமை உச்சத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக் குழு கூட்டம் பற்றி விவாதிப்பதற்கு திட்டமிடப்பட்டது.

ஆனால் அந்த கூட்டம் எப்படியோ ஆரம்பித்து சலசலப்பில் முடிந்தது. கூட்டம் முடிந்தாலும் அதன் தொடர் வினைகள் 3 நாட்களாக வட்டமடித்துக் கொண்டே இருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் உள்ளேயும் வெளியேயும் திடீரென ஒற்றைத் தலைமை குறித்த பேச்சு வந்ததால்தான் இத்தனை பரபரப்புக்கும் காரணமாக அமைந்துவிட்டது.

மாவட்டச் செயலாளர்கள்

மாவட்டச் செயலாளர்கள்

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அப்படி என்னதான் நடந்தது என்பது குறித்து ஒன் இந்தியா சார்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரையும் ஓபிஎஸ் தரப்பினரையும் கேட்டோம். முதலில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூறுகையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக் குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஒற்றைத் தலைமை

ஒற்றைத் தலைமை

அப்போது திடீரென வெளியே இருந்து ஒற்றைத் தலைமை குறித்த கோஷங்களை ஓபிஎஸ் தரப்பினர் முழங்கினர். இதனால் எடப்பாடி தரப்பினரும் பதில் கோஷமிட்டனர். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என எங்களுக்கு தெரியாது. இவை நாங்கள் கேள்விப்பட்ட ஒன்று என்றனர்.

 ஓபிஎஸ் தரப்பு

ஓபிஎஸ் தரப்பு

அது போல் ஓபிஎஸ் தரப்பினரிடம் கேட்ட போது, ஜெயலலிதாவால் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ்தான். கட்சி பிளவுப்பட கூடாது என்பதற்காக முதல்வர் பதவி, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அரசு கொறடா பதவி உள்ளிட்டவற்றை விட்டு கொடுத்தார். இனியும் கட்சியையே விட்டுக் கொடுக்குமாறு கேட்டால் என்ன அர்த்தம்?

அமைதி

அமைதி

முதலில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது எடப்பாடி தரப்பை சேர்ந்த ஆதி ராஜாராம்தான் வெளியே வந்து ஒற்றைத் தலைமை என கோஷமிட்டார். அவரை பார்த்துதான் நாங்கள் பதில் கோஷமிட்டோம். அது போல் எங்கள் அண்ணனின் சொந்த மாவட்டமான தேனியில் கூட எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் என போஸ்டர் ஒட்டினார்கள். அதற்கும் நாங்கள் அமைதி காத்தோம்.

யாரு தூண்டியது

யாரு தூண்டியது

ஆனால் ஆதி ராஜாராமன் கோஷமிட்டதை பார்த்தவுடன் எங்களால் பொறுக்க முடியவில்லை. அதனால் நாங்கள் கோஷமிட்டோம் என்றனர். இப்படியிருக்க பொதுக் குழு கூட்டம் எதற்காக கூடுகிறது என விசாரித்த போது ஒற்றைத் தலைமையை தேர்வு செய்ய இல்லை என்ற ஒரு தகவலும் கிடைத்துள்ளது. அதாவது ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் முதல் கிளைச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரை நடந்து முடிந்தது.

 எதற்காக கூட்டம்

எதற்காக கூட்டம்


இதற்கான ஒப்புதலை வாங்குவதற்காகத்தான் இந்த பொதுக் குழுவே கூடுகிறது. இந்த பதவிகள் எல்லாம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அப்படியிருக்கும் போது இவற்றை எப்படி நீக்கிவிட்டு புதிய பதவிகளான தலைமை ஒருங்கிணைப்பாளர், பொதுச் செயலாளர் பதவிகளை கொண்டு வர முடியும் என நம்மிடம் எதிர் கேள்வியை எழுப்பினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+