கிரிக்கெட்டில் இப்படி எல்லாம் நடக்குமா?.. மலைக்க வைத்த சம்பவம்.. அவார்ட் கொடுத்து பாராட்டிய ஐசிசி!
சென்னை: அயர்லாந்து கிரிக்கெட் கிளப் போட்டி ஒன்றில் நடைபெற்ற சம்பவம் உலக அளவில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
ஐபிஎல் போட்டிகள் போலவே உலகம் முழுக்க பல கிளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அயர்லாந்தில் பெண்களுக்கான கிளப் அணிகள் நிறைய உருவாக்கப்பட்டு டி 20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அயர்லாந்தில் நடந்து வரும் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த டி 20 போட்டிகள் ஆல் அயர்லாந்து டி 20 கோப்பை என்று அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு நாட்களுக்கு முன் பிரெடி கிரிக்கெட் கிளப் மற்றும் சிவில் சர்வீஸ் நார்த் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் விறுவிறுப்பான ஆட்டம் நடைபெற்றது.

ஆட்டம்
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸ் அத்தனை விறுவிறுப்பாக செல்லவில்லை. உண்மையில் ஆட்டம் சூடு பிடித்ததே இரண்டாவது இன்னிங்சில்தான். காரணம் அங்கு மைதானத்திற்குள் வந்த நாய் குட்டி ஒன்று. பார்வையாளர் கூட்டி வந்திருந்த நாய் குட்டி ஒன்று அங்கு ஆட்டம் நடக்கும் போது மைதானத்திற்குள் நுழைந்தது.

மைதானம்
போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டு போது நாய் குட்டி ஒன்று உள்ளே வந்தது. பேட்ஸ்வுமன் ரன் அடித்துவிட்டு ஓடும் போது உள்ளே வந்த நாய் குட்டி, கீப்பர் தூக்கி வீசிய ஓவர் த்ரோ பந்தை பிடித்து அப்படியே மைதானத்தை சுற்ற தொடங்கியது.பொதுவாகவே நாய் குட்டிகள் பந்தை பிடித்தாலே அதை தூக்கிக்கொண்டு ஓடுவது வழக்கம்.

சுற்றியது
அதேபோல் அந்த நாயும் பந்தை பிடித்துவிட்டு வாயில் வைத்துக்கொண்டு மைதானம் முழுக்க சுற்றியது. இந்த நாயை பிடிக்க வீராங்கனைகள் அதன் பின்னாடியே ஓடினார்கள். ஆனால் அந்த நாய் நிற்கவில்லை. இதனால் புத்திசாலித்தனமாக யோசித்த பேட்ஸ்வுமன் கீழே உட்கார்ந்து அந்த நாயை அருகில் அழைத்தார். அந்த நாயும் நல்ல பிள்ளையாக அவரை நோக்கி சென்று.. சரியாக பந்தை அவரிடம் கொடுத்தது.

க்யூட் வீடியோ
இந்த க்யூட் வீடியோ இணையம் முழுக்க பெரிய அளவில் வைரலானது. இந்த அழகான சம்பவம் நெட்டிசன்கள் இடையே டிரெண்ட் ஆனது. பல கிரிக்கெட் விமர்சகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கிரிக்கெட்டில் இப்படி எல்லாம் அழகான விஷயங்கள் நடக்குமா.. பார்க்கவே சந்தோசமாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

ஐசிசி
இந்த நிலையில் அந்த நாய் குட்டிக்கு சிறப்பு பரிசு வழங்கி உள்ளது. மாத மாதம் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த மாதத்தில் கிரிக்கெட் உலகில் சிறந்த நாய் என்றும் சிறந்த பில்டர் என்றும் விருது வழங்கி உள்ளது. இப்படி ஒரு பிரிவு கிடையாது என்றாலும் அந்த நாய் குட்டிக்காக சிறப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி விருது வழங்கி உள்ளனர். ஐசிசியும் அந்த நாயை கொண்டாடி விருது வழங்கியது பாராட்டுகளை பெற்று வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications