Jothimani: நான் கரூர்ல இருக்கேன்! என்னை ஏன் வம்பிழுக்குறீங்க? "தளபதி"க்கு ஜோதிமணி எம்பி கேள்வி
சென்னை: திமுக எம்எல்ஏ தளபதி, தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக் கூடாது, நீங்கள் மதுரையில் இருக்கீங்க, நான் கரூரில் இருக்கிறேன் என கரூர் எம்பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.தளபதி அவர்கள் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது?

காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை
எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.
அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்.
களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.அமைதி காக்கிறோம்.
கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன்.
வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது. இவ்வாறு ஜோதிமணி தெரிவித்திருந்தார்.
மீண்டும் சலசலப்பு
திமுக கூட்டணியில் மீண்டும் ஒரு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோருக்கு எதிராக திமுக எம்.எல்.ஏ. தளபதி தெரிவித்த கருத்து ஒரு பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. மதுரை எம்.எல்.ஏ. தளபதியின் இந்தப் பேச்சுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. சமூக வலைத்தளத்தில் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நடந்தது என்ன
சமீபத்தில் மதுரையில் நகர் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில், எம்.எல்.ஏ. தளபதி உரையாற்றினார். அவர் தனது பேச்சில், "காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் எப்படியோ எம்.பி.க்களாகிவிட்டனர். தற்போது எல்லாவற்றிலும் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் எனப் பேசுவது வேதனை அளிக்கிறது," என்றார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு மூவாயிரம் ஓட்டுகளே உள்ளன; பூத் கமிட்டிக்குக்கூட ஆட்கள் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தளபதி பேசியது என்ன
தளபதி தொடர்ந்து பேசுகையில், "இதை திமுக தலைமை புரிந்துகொண்டு வரும் மக்களவைத் தேர்தலில் இவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது. அதற்கான பணியை நாம் செய்ய வேண்டும். திமுக இல்லையெனில் 'இந்தியா' கூட்டணியே இல்லை; தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தான் இக்கூட்டணியைக் காப்பாற்றி வருகின்றனர்," என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூர்
தளபதியின் இந்தப் பேச்சுக்குக் காட்டமாகப் பதிலடி கொடுக்கும் விதமாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில், "இந்த முறை மதுரை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானத்தைக் காக்க சிலருக்குப் பாடம் புகட்ட வேண்டும். அதிகாரத் திமிருடன் இருந்தால் தோழமைக் கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது," என்று தெரிவித்தார். இது திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
மோதல் ஏன்
இந்த மோதலின் பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை வடக்கு தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக திமுகவின் தளபதி இருக்கிறார். வரவிருக்கும் தேர்தலில் இத்தொகுதியைத் தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது. மாணிக்கம் தாகூர் எம்.பி. இந்த கோரிக்கையின் பின்னால் இருப்பதாலேயே தளபதி அக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேறுபட்ட கருத்து
தளபதியின் இந்தப் பேச்சு குறித்து இரு வேறுபட்ட கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றன. "இது தேவையற்றது; கூட்டணிக்குள் தேவையற்ற புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது," என்கிறது ஒரு தரப்பு. ஆனால், "திமுகவை அடிக்கடி விமர்சிக்கும் மாணிக்கம் தாகூருக்குத் தளபதி சரியான பதிலடி கொடுத்துள்ளார்," என மற்றொரு தரப்பு தளபதியின் கருத்தை ஆதரித்து வருகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications