பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்தி பரப்ப வேண்டாம்.. முதல்வர் எச்சரிக்கை
சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து இஸ்லாமிய சகோதரர்களிடையே சிலர் தொடர்ச்சியாக வதந்திகளை பரப்புகின்றனர் என்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் முதல்வர் பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.
மத்தியில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பல இடங்களில் இதனால் வன்முறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகினற்ன. முஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு விரோதமாக இந்த சட்டம் இருப்பதாக அந்த கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன, திமுக குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது நாளை 11 கட்சிகள் இணைந்து பிரம்மமாண்ட பேரணியை நடத்த உள்ளன.

தமிழக அரசு உறுதி
இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்களிடையே சிலர் தொடர்ச்சியாக வதந்திகளை பரப்புவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், எந்த காலத்திலும் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தொடர்ந்து பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
|
நம்பாதீங்க
குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து இஸ்லாமிய சகோதரர்களடையே சிலர் தொடர்ச்சியாக வதந்திகளை பரப்புகின்றனர். இது முற்றிலும் தவறானது ஆகும். இந்த பொய்யான வதந்தியை நம்ப வேண்டாம்.

அதிமுக வலியுறுத்தல்
இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பிரதமரிடம், உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நாடாளுமன்றத்திலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி உள்ளது.

எந்த பாதிப்பும் இல்லை
சிறுபான்மை மக்களுக்கு எக்காலத்திலும் எந்த பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தில் மக்கள் மத்தியில் பதற்றத்தை எற்படுத்த முயற்சிக்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். ‘
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications