கோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்
சென்னை: கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி நேரடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
கோவில்களில் திருவிழாக்களின் போது, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட முடியுமா என்ற கேள்விக்கு தீர்வு காணும்படி, வழக்குகளை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.
அதன்படி, இந்த வழக்குகளை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைத்தார், தலைமை நீதிபதி. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கார்த்திகேயன் அடங்கிய அமர்வு, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி இரண்டு வாரங்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், விண்ணப்பித்த இரு நாட்களில் அதன் மீது முடிவெடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி, நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்பங்களை இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்து காவல் துறை உத்தரவிட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், காவல் துறைக்கு விண்ணப்பித்து விட்டு, நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும்படி உத்தரவிடக் கோரி நேரடியாக வழக்கு தொடர முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications