திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா
சென்னை: மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்நிலையில், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறப்போகும் அன்பகத்தின் 75 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பம் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களின் சிலைகளை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ள நிலையில், ஒட்டுமொத்த அரசியல் களத்தின் பார்வையும் தேனாம்பேட்டையை நோக்கி திரும்பியிருக்கிறது.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுகவின் இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில், கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு 75 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டுள்ளது

கருணாநிதி பிறந்தநாள் விழா
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வோடு சேர்த்து, திராவிட இயக்கத்தின் தூண்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகிய மூவரின் திருவுருவச் சிலைகளையும் திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
தலைநகர் சென்னையில் ஒரே இடத்தில் இந்த மூன்று தலைவர்களின் சிலைகளும் திறக்கப்படுவது தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று காலை முதலே முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தொடர் நிகழ்ச்சிகள் சென்னை முழுவதும் அணிவகுக்கின்றன. இதன்படி, காலை 8 மணிக்கு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கு மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார்..
அதனைத் தொடர்ந்து சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசு வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் கலைஞரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுக மூத்த தலைவர்கள் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளும் கருணாநிதி படத்திற்கு மலர்துவி மரியாதை செலுத்தினார்கள்,
இதற்கு அடுத்தபடியாக, கலைஞரின் மூச்சாக விளங்கிய முரசொலி நாளிதழின் கோடம்பாக்கம் வளாகத்திற்கு ஸ்டாலின், அங்குள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.. பிறகு அளவில் அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின்
இந்தத் தொடர் நிகழ்வுகளின் உச்சகட்டமாக மற்றும் மிக முக்கியமான திருப்புமுனையாக காலை 9:30 மணிக்கு தேனாம்பேட்டை அன்பகத்தில் பிரம்மாண்ட விழா அரங்கேறியது.. அங்கு வானுயர எழுந்து நிற்கும் 75 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுகவின் கழகக் கொடியை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.. அதே மேடையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திருவுருவச் சிலைகளையும் அவர் திறந்து வைத்தார்.
தலைநகர் சென்னையின் இதயப் பகுதியில், திராவிட இயக்க வரலாற்றின் மிக முக்கிய மைல்கல்லாக அமையவுள்ள இந்தச் சிலை திறப்பு விழா மற்றும் 75 அடி உயர கொடியேற்று நிகழ்வுக்காக அன்பகம் வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இதையொட்டி, சென்னை முழுவதும் திமுக தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் திரள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டன.
உதயநிதி ஸ்டாலின் அழைப்பு
முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். 75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட அன்பகம் இன்று திமுக இளைஞரணி தலைமையகமாக விளங்கி வருகிறது.
இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் 1988ம் ஆண்டு முத்தமிழறிஞர், கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.
இன்று திறந்து வைப்பு
28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான இன்று காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி.
இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி,
ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்று கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications