லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த வேண்டும்: பிரணாப் ஆலோசனைக்கு ராமதாஸ் வரவேற்பு
சென்னை: லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஆலோசனையை வரவேற்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரணாப் முகர்ஜி, நாட்டின் மக்கள் தொகை 55 கோடியாக இருந்த போது 1977-ல் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை திருத்தப்பட்டது. தற்போது மக்கள் தொகை இரு மடங்கு உயர்ந்துள்ள நிலையில் லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கையை 543-ல் இருந்து 1,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்றார்.

பிரணாப் முகர்ஜியின் இந்த கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளதாவது:
மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஆலோசனை வரவேற்கத்தக்கது. இந்த யோசனையை பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. கடைசியாக கடந்த ஜூலை 6-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
1. மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்ற குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஆலோசனை வரவேற்கத்தக்கது. இந்த யோசனையை பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. கடைசியாக கடந்த ஜூலை 6-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன்.
— Dr S RAMADOSS (@drramadoss) December 17, 2019
மக்களவை மட்டுமின்றி சட்டப்பேரவை தொகுதிகளையும் அதிகரிக்க வேண்டும். மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படாமல்,இப்போதுள்ள விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் உயர்த்தப்பட வேண்டும். இதற்கு வசதியாக 2001-ஆம் ஆண்டின் 84வது அரசியல் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும்!.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications