டெய்லி 1440 வாய்ப்புகள் கிடைக்கின்றன.. சொன்னது யார் தெரியுமா??
சென்னை: சிந்தனை செய் மனமே.. செய்தால்.. இது சாமி பாட்டு.. ஆனால் நல்லதை யார் சொன்னா என்னங்க, சாமி சொன்னால் என்ன.. இல்லை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொன்னால் என்ன.. நல்ல விஷயத்தை மனதில் போட்டுக் கொண்டு நடை போட்டால் நாளும் வெற்றிதானே.
கரெக்டுதான்.. இது டாக்டர் ராமதாஸ் போட்டுள்ள லேட்டஸ்ட் டிவீட் குறித்த செய்திதான்.. ஆனால் இன்று அவர் போட்டுள்ள டிவீட், இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டக் கூடியது.
ஒவ்வொருவருக்கும் பொழுது ஆரம்பிக்கும்போது இருக்கும் உற்சாகமும், உத்வேகமும் போகப் போக தளர்ந்து அந்த நாள் முடியும் போது ஏதாவது ஒரு விரக்தி வந்து தொற்றிக் கொள்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த டிவீட் நிச்சயம் பெரும் பூஸ்ட் ஆக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒவ்வொரு நாளும் 1440 நிமிடங்கள் உள்ளன. இதன் பொருள் என்னவென்றால் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக நமக்கு தினமும் 1440 வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது தான்!
— Dr S RAMADOSS (@drramadoss) February 4, 2019
- லெஸ் பிரவுன்
இதுதான் டாக்டர் ராமதாஸ் இன்று போட்டுள்ள டிவீட்... ஒவ்வொரு நாளும் 1440 நிமிடங்கள் உள்ளன. இதன் பொருள் என்னவென்றால் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக நமக்கு தினமும் 1440 வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது தான்!
- லெஸ் பிரவுன்.
எத்தனை அர்த்தங்கள், கருத்துக்கள் இதில் பொதிந்துள்ளன பாருங்கள். இதை விட தன்னம்பிக்கை ஊட்டக் கூடிய விஷயம் ஏதாவது இருக்க முடியுமா.. அத்தனைக் கதவுகளும் அடைபட்டாலும் கூட வேறு ஏதாவது ஒரு கதவு திறந்திருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் அழகு மொழி இந்த தத்துவ மொழி.
நாளும் இதுபோன்ற நல்ல விஷயங்களை மனதில் இருத்தி நடை போட்டால் நாளை நமதே.. நாடும் நமதே.. வெற்றியும் நமதே. (அப்பாடா அரசியல் கலப்பே இல்லாமல் எழுதிட்டோம்ப்பா)