பத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்!
பத்திரிகையாளர்களுக்கு முகவரி தந்தது பாமக என்று ராமதாஸ் கூறியுள்ளார்
சென்னை: பத்திரிகையாளர் சங்கத்திற்கு அட்ரஸ் கொடுத்ததே பாமகதான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பத்திரிகையாளர்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் பேசி வருவதாக கருத்துக்கள் எழுந்து வருகின்றன. நாய்ங்களா, சண்டாள பசங்களா, கம்மனாட்டிங்களா.. என்றெல்லாம் வார்த்தைகளை பயன்படுத்தி ராமதாஸ் பேசியதாகவும், இது சம்பந்தமான வீடியோக்களும் வெளியாகியது.
இதற்கு பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், டாக்டர் ராமதாஸ், "பழைய செய்திதான், இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக" என்று சில தகவல்களை தனது பேஸ்புக் பதிவில் போட்டுள்ளார். அந்த பதிவு இதுதான்:

தெரியாத உண்மை
"பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகம் 63, நாட்டுமுத்து நாயக்கன் தெரு, வன்னிய தேனாம்பேட்டை, சென்னை -18 என்ற முகவரியில் தான் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான தினப்புரட்சி செயல்பட்டு வந்தது. இந்த விஷயங்கள் பெரும்பான்மையான தமிழக மக்களுக்கு தெரிந்திருக்கக்கூடும்.

பத்திரிகையாளர் சங்கம்
ஆனால், பெரும்பான்மையினருக்கு தெரியாத உண்மை.... இதே அலுவலகத்தில் தான் தமிழ்நாடு பத்திரிகையாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது என்பது தான். புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் அண்ணா பாலு, பொதுச்செயலாளர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் ஆகியோர் என்னை அணுகி தங்கள் சங்கத்துக்கு அலுவலகம் இல்லை என்றும், அதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக் கொண்டனர்.

முதல் அலுவலகம்
அதையேற்ற நான் பா.ம.க. அலுவலகத்தின் மாடியில் எனது சொந்த செலவில் தற்காலிக அலுவலகம் அமைத்துக் கொடுத்தேன். அது தான் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்திற்கு முதல் முகவரியாகும். அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த பலரும், பிற பத்திரிகையாளர்களும் எந்த நேரம் வேண்டுமானாலும் அங்கு வரலாம்; தங்கிச் செல்லலாம் என்ற அளவுக்கு பா.ம.க. தலைமை அலுவலகம் பத்திரிகையாளர்களின் புகலிடமாக திகழ்ந்தது.

கலைஞர்
அதுமட்டுமின்றி, அப்போது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளராக நான் கலந்து கொள்வேன். ஒருமுறை திமுக தலைவர் கலைஞரும் என்னுடன் பத்திரிகையாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

சமூகநீதி
அப்போதிருந்த பத்திரிகையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இப்போதும் எனது நண்பர்கள் தான். அப்போதைய பத்திரிகையாளர்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் ஊடக அறத்தைக் கடைபிடித்தவர்கள். சிலரது நெஞ்சத்தில் வஞ்சம் இருந்தாலும் பெரும்பான்மையினர் சமூகநீதிக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் தான். அப்போது ஊடகத்துறையில் அறம் உயிரோடு இருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications