Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தமிழகத்திற்கு நிதி மறுக்கும் மத்திய அரசு.." களத்தில் இறங்கும் தி.க! போராட்டத்தை அறிவித்த வீரமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024-25 கல்வி ஆண்டில் எஸ்எஸ்ஏ திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தரவில்லை. தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததாலே மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று விமர்சித்துள்ள தி.க தலைவர் வீரமணி, இதைக் கண்டித்து வரும் ஆக. 3ம் தேதி தமிழ்நாடு முழுக்க போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து தி.க. தலைவர் கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுக்கு, மத்திய (தேசிய ஜனநாயக - இன்றைய கூட்டணி) அரசு சட்டப்படி தரவேண்டிய கல்வித் தவணை நிதி 367 கோடி ரூபாயைத் தராமல் - வேண்டுமென்றே நிலுவையில் வைத்து இழுத்தடிப்பது, எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.

central govt

கி வீரமணி: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தும், இப்படி பாராமுகமாகவும், அலட்சியமாகவும் இருப்பது, வஞ்சம் தீர்க்கும் வன்ம அரசியல் அல்லாமல் வேறு என்ன? தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது!

தேசியக் கல்விக் கொள்கை (NEP) என்ற பாஜக - ஆர்எஸ்எஸ் உருவாக்கிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு - திமுக அரசு எடுத்துக்காட்டான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'திராவிட மாடல்' அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கேற்ப செயல்படுத்த ஒப்புதல் தராததே இந்த நிதித் தவணையைத் தராமல் காலதாமதம் செய்யும் அரசியல் அவலத்திற்கு மூல காரணம் - மறைமுகக் காரணம் என்றும் அவதானிக்கப்படுகிறது அரசியல் வட்டாரங்களில்!

கூட்டாட்சி: இந்தியா ஒரு கூட்டாட்சி அரசு - பாஜக வாய்மொழி வடிவில் வாய்ப்பறைக் கொட்டுவது "கூட்டுறவுக் கூட்டாட்சி" - "Co-operative Federalism" என்பதாகும். அதன் லட்சணம், யோக்கியதை இதுதானா? ஆர்எஸ்எஸ் வகுத்த இந்த "தேசிய கல்வித் திட்டம்" என்பது சமூகநீதிக்கும், பெண்களுக்கான கல்வி பரப்புதலுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் 51-ஏ (எச்) என்ற அறிவியல் மனப்பாங்கினை வளர்ப்பதற்கும் முற்றிலும் முரணான ஒன்று என்பதால், சமதர்ம, சம வாய்ப்பினை வற்புறுத்தும் 'திராவிட மாடல்' ஆட்சியின் கொள்கைத் திட்ட நடை முறைக்கு எதிரானது என்பதால் எதிர்க்கிறது, ஏற்க மறுக்கிறது. அதிலென்ன தவறு இருக்க முடியும்?

கல்வி என்பது முன்பு மாநிலப் பட்டியலின்கீழ் மட்டுமே இருந்த ஒன்று. நெருக்கடி நிலையைக் குறைகூறும் மத்திய பிஜேபி அரசு - கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வராதது ஏன்? அன்றைய நெருக்கடி காலம்பற்றி இன்று வாய்க்கிழியப் பேசும் பாஜக - ஆர்எஸ்எஸ்-காரர்கள் 42ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின்கீழ் நெருக்கடி காலத்தில் ஏற்படுத்தப்பட்டவற்றையெல்லாம் மாற்றினார்களே, அப்போது கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்ற எந்த முயற்சியும் செய்யாமல், தங்களது கலாச்சாரப் படையெடுப்புக்கு ஹிந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு போன்றவற்றிற்கு வசதியாக இருக்கட்டும் என்று கருதியே, இதனை மட்டும் மாற்றாமல் வைத்திருந்தனர்.

கல்வி: இதுகுறித்து கல்வி அறிஞர்கள் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீண்ட காலமாக பாதி விசாரணையோடு நின்று உள்ளது. அப்படி இருந்தாலும்கூட, கல்வி என்பது இன்றும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (Concurrent List) இடம்பெற்றுள்ளது! அதன்படி மாநில அரசுக்கு அது தனக்கேற்ப கல்வித் திட்டத்தை - மாநில சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டே - அதன் கொள்கைத் தத்துவங்களுக்கு முரண் இல்லாத ஒரு கல்வித் திட்டத்தையே பின்பற்ற முழு உரிமை உண்டே!

அதற்காக இப்படி நமது உரிமைப்படித் தரவேண்டிய பணத்தை நிறுத்திக் கொண்டு, பழைய ஈட்டிக்காரர்களைப் போன்று அடாவடித்தனம் செய்வது எவ்வகையில் நியாயமாகும்? நிதி நெருக்கடியைத் தந்தால் - தேர்தல் வாக்குறுதிகளை செய்யாமல் தடுத்து, திமுக மீது தமிழ் மக்களுக்கு - குறிப்பாக வாக்காளர்களுக்கு வெறுப்பு ஏற்படும் என்று ஒரு தப்புக் கணக்குப் போட்டுத்தானே இந்த மாதிரி நிதி மறுப்பு வியூகங்களின்மூலம் வினையாற்றுகிறது!

அதையும் தாண்டி நிதி ஆலோசனைப் பெற்று Fiscal Management - சிறப்பாக முதலமைச்சர் செய்து, மக்களுக்குச் சொன்னதைத் தாண்டி, சொல்லாததையும் செய்து வரலாறு படைத்து வான்புகழ் கொள்வது - இந்த வயிற்றெரிச்சல்காரர்களால் செரிமானம் செய்ய முடியாதபடி இப்படி 'கீழறுப்பு' வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

போராட்டம்: இதனை மக்களுக்கு விளக்கவும், இந்த அற்பத்தன அடாவடித்தனத்தைக் கண்டிக்கவும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் வருகிற ஆக. 3ம் தேதி சென்னை மாவட்டத் தலைநகர் மற்றும் அனைத்துக் கழக மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட அறிவிப்புச் செய்துள்ளோம். உடனடியாக இதனை வெற்றிகரமாக - மக்களிடம் அநீதியின் கொடுமையை விளக்கி, காவிகளின் ஓரவஞ்சனையை அம்பலப்படுத்த - அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தினை வெற்றிகரமாக நடத்திடவேண்டும் என்பது அவசர அவசியமாகும்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+