"சார் அதிமுகவில் உள்கட்சி பூசல்.." அப்படியா தெரியாதே எனக்கு.. அமைச்சர் துரைமுருகன் கலகலப்பு
சென்னை: அதிமுகவில் உள்கட்சி பிரச்சினை நடக்கிறதே அது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டதற்கு அமைச்சர துரைமுருகன் கலகலப்பான பதிலை அளித்தார்.
Recommended Video
முன்னாள் முதல்வர் கருணாநிதி பத்திரிகையாளர் சந்திப்பிலும் சரி பொதுக் குழு கூட்டங்களிலும் சரி நகைச்சுவையாக பேசுவதில் அவரை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் அசந்து போவது போல் ஒரு பதிலை அளிப்பார்.
ஆனால் அந்த பதில் நகைச்சுவையாக இருக்கும். சட்டசபையிலும் சரி எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கும் சில நேரங்களில் நகைச்சுவையாக பதில் அளிப்பது அவர் வாடிக்கையாகும்.

துரைமுருகன்
அவரை போல் நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் எப்போதும் நகைச்சுவையாகவே பேசுவார். அவரது உடல்மொழியிலும் அத்தனை நகைச்சுவை இருக்கும். கட்நத 2018ஆம் ஆண்டு சட்டசபையில் துரைமுருகன பேசும் போது சினிமா துறைக்கு போயிருந்தால் ஜெயலலிதாவோடு நடித்திருகக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். சிவாஜி கணேசன்போல் ஆகியிருப்பேன் என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

கொரோனா
கடந்த 2020 ஆம் ஆண்டு சட்டசபையில் கொரோனா குறித்து திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அந்த விவாதத்தின் போது துரைமுருகன், எங்கு பார்த்தாலும் கொரோனா பயமாக இருக்கிறது. போன் எடுத்தால் இருமி கொரோனா என்கிறார்கள். நீங்கள் (முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி) ஒன்றும் இல்லை என சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே. ஏசியில் இருந்தால் கொரோனா பரவும் என்ற பயத்துடன் இருக்கிறோம். காப்பாத்துங்க சார். நாங்கள் எல்லாம் புள்ள குட்டிக்காரர்கள். உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆச்சுன்னஆ இடைத்தேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம் என கூறியது அவையில் சிரிப்பை ஏற்படுத்தியது.

குஷ்புவுக்கு கோயில்
பின்னர் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் எம்ஜிஆருக்கு தனிநபர் ஒருவர் கோயில் கட்டியுள்ளார். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டார்கள். அதற்கு துரைமுருகன், குஷ்புவுக்கு கோயில் கட்டினாங்க, அதுக்கு இது பரவாயில்லை என கூறி கொள்ளென சிரித்தார். இவ்வாறு துரைமுருகன் இருக்கும் இடத்தில் சிரிப்பு சப்தமாக இருக்கும் என்பார்கள்.

அப்படியா தெரியாதே எனக்கு
அந்த வகையில் இன்றைய தினம் அவரிடம் அதிமுகவில் உள்கட்சி பூசல் அதிகமாக இருக்கு. இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு துரைமுருகன் "அப்படியா, தெரியாதே எனக்கு" என கூறி சிரித்துக் கொண்டே சென்றார். அவரது கூறியதை விட அவரது முகபாவனைகள் சிரிப்பை வரழைத்தன.












Click it and Unblock the Notifications