சட்டசபையில் ஒரு சூப்பர்ஸ்டார்.. ஸ்டாலின் புகழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் சிந்திய துரைமுருகன்!
சென்னை: திமுக பொதுக் குழுவில் தன்னை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்ததால் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆனந்த கண்ணீர் விட்டார். இதை பார்த்த அவரது மகனும் வேலூர் தொகுதி எம்பியுமான கதிர் ஆனந்தும் கண்ணீர் சிந்தினார்.
Recommended Video
திமுக பொதுச் செயலாளர் க அன்பழகன் கடந்த ஆண்டு மறைந்தார். இதையடுத்து அப்பதவி காலியாக இருந்து வந்தது. இந்த பதவிக்கு துரைமுருகன் உள்ளிட்டோர் போட்டியிட முடிவு செய்தனர்.
காலியாக இருந்த பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலு உள்ளிட்டோர் போட்டி போட்டனர். இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி மேற்கண்ட பதவிகளுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

போட்டியின்றி தேர்வு
திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் திமுக பொருளாளர் பதவிக்கு டி ஆர் பாலும் வேட்புமனு தாக்கல் செய்த போதே போட்டியின்றி தேர்வாகிவிட்டனர். இந்த நிலையில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இன்று அண்ணா அறிவாலயத்தில் பொதுக் குழு கூடியது.

8 மாதங்கள்
அதில் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும் திமுக பொருளாளராக டி ஆர் பாலுவும் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில் திமுக இன்னும் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக அமரும். இந்தி திணிப்பவர்களை நாம் ஆக்ரோஷமாக எதிர்த்து வருகிறோம்.

சூப்பர் ஸ்டார்
விரைவில் சட்டசபை தேர்தல் வரும். அதற்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். நான் தலைவராக இருக்கும் போது துரைமுருகன் பொதுச் செயலாளர் ஆனது எனக்கு மகிழ்ச்சி. பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். 9 முறை சட்டசபைக்கு தேர்வான துரைமுருகன் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

கண்ணீர்
பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும் என்றார். தன்னை பற்றி ஸ்டாலின் பேச பேச துரைமுருகனால் அழுகையை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டார். இவரை பார்த்த அவரது மகன் கதிர் ஆனந்தும் கண்ணீர் சிந்தினார்.












Click it and Unblock the Notifications