புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! திருமாவளவன் வந்ததுமே துர்கா ஸ்டாலின் செய்த செயல்! பூரித்த விசிகவினர்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்ச்சியின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை பார்த்து முதல்வர் ஸ்டாலின் மனைவி செய்த செயல் வைரலாகி வருகிறது.
தமிழக அமைச்சரவையில் நேற்றைய தினம் பெரிய அளவில் மாற்றங்களை செய்துள்ளார். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகிய 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அது போல் செந்தில் பாலாஜி, கோவி செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு விழா நேற்றைய தினம் ஆளுநர் மாளிகையில் நடந்தது. இந்த விழாவில் 34 அமைச்சர்களில் 32 அமைச்சர்கள் (புதியவர்களுடன் சேர்த்து) கலந்து கொண்டனர்.
ஒவ்வொருவருக்கும் பதவிப்பிரமாணத்தையும் ரகசிய காப்பையும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். இந்த நிலையில் இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியின் மனைவி கிருத்திகா, மகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அது போல் கூட்டணி கட்சியினர்களான செல்வப்பெருந்தகை, திருமாவளவன், ஜவாஹிருல்லா, வைகோ, மக்கள் நீதி மய்யம் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமாவளவன் அந்த நிகழ்ச்சிக்கு வந்த போது முன்வரிசையில் துர்கா ஸ்டாலின் அமர்ந்திருந்தார்.
அப்போது துர்கா ஸ்டாலின், திருமாவளவனை பார்த்ததும் எழுந்து சிரித்தபடியே வாங்க, வணக்கம் என்றார். பதிலுக்கு திருமாவளவனும் வணக்கம் வைத்துவிட்டு பின்னால் இருந்த அமைச்சர்களை நோக்கி சென்றார். அப்போது நீலகிரி எம்பி ஆ.ராசா, தான் அமர்ந்திருந்த இருக்கையை திருமாவளவனுக்கு விட்டுக் கொடுத்தார். இதை பார்த்த விசிகவினர் பூரித்து போனார்கள்.

முதல் வரிசையில் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி, அவருடைய மகள், உள்ளிட்டோருக்கு இருக்கை போடப்பட்டிருந்தது. அது போல் பின் வரிசையில் கூட்டணி கட்சி தலைவர்களான வேல்முருகன், ஜவாஹிருல்லா, முத்தரசன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். அவர்களுடன் ஆ ராசா, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் வருவதை அறிந்த துணை முதல்வர் உதயநிதி, வாசல் வரை சென்று வரவேற்று அழைத்து வந்தார். இதைத் தொடர்ந்து முதல்வரும், துணை முதல்வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
-
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
ராயபுரத்தை கேட்ட ஆளூர் ஷாநவாஸ்.. டீலில் விட்டது ஏன்? திருமாவளவன் சொன்ன பாயிண்ட்! இதுதான் காரணம் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்!












Click it and Unblock the Notifications