மின்சார வாரியம் சொல்றதை பாருங்க.. கரண்ட் பில்லில் அன்று போட்ட கிடுக்கிப்பிடி.. இன்று சூப்பர்ல.. செம
சென்னை: மின்வாரியம் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளது.. இது மின்சார வாரியத்துக்கு மகிழ்ச்சியையும் தந்து வருகிறது. என்ன காரணம்?
2 நாட்களுக்கு முன்பு, மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக்கட்டுப்பாட்டாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.. அதில், "மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும். நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

மாவட்டங்கள்: குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000-க்கும் அதிகமான மீட்டர்கள் பழுதடைந்து உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பிறகு, அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மாநிலம் முழுமையிலும், பழுதடைந்த மீட்டர்கள் எவ்வளவு? மின் கட்டணம் செலுத்தாதவர்கள் எத்தனை பேர் என்ற தகவலும் தனித்தனியாக வெளியாகியிருந்தது. அந்தவகையில், மாநிலம் முழுதும் ஒரு முனைப்பிரிவில், 1.74 லட்சம் மீட்டர்களிலும், மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களிலும், மும்முனை பிரிவில், 32,000 மீட்டர்களிலும் குறைபாடுகள் உள்ளதாக மின் வாரியம் கண்டறிந்துள்ளது..
அதிகப்பட்ச மீட்டர்கள்: இதில், அதிகப்பட்சமாக மீட்டர்கள் பழுதாகி இருப்பது செங்கல்பட்டு மாவட்டம்தானாம்.. இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 13,451 மீட்டர்கள் பழுதாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, கிருஷ்ணகிரியில் 13,351 மீட்டர்களும், இதற்கு அடுத்தபடியாக சென்னை தெற்கில் 13,125 மீட்டர்களும் பழுதடைந்து உள்ளன.
நாகை மாவட்டத்தில் 10,654, திருச்சி நகரில் 10,212, சென்னை மேற்கில் 9,365, நெல்லையில் 9,253, சென்னை வடக்கில், 8,904, தஞ்சையில் 8,557 மீட்டர்களும் பழுதடைந்து உள்ளதாக மின்வாரியம் லிஸ்ட் போட்டு கூறியுள்ளது.
கரண்ட்பில்: அதேபோல, இந்த மாதம் 12ம் தேதி வரை 59,565 பேர் மின்கட்டணம் செலுத்தாமல் உள்ளார்களாம்.. இவர்கள் அனைவருமே, தங்களின் அவகாசத்தை தாண்டி அதாவது 10 நாட்களுக்கும் மேலாக, கரண்ட் பில் கட்டாமல் இருக்கிறார்களாம்.. இந்த மின் கட்டணம் மட்டும் 47.26 கோடியாகும்.. இவர்கள் அனைவருமே உடனடியாக பில் கட்ட வேண்டும் என்றும், அவர்களின் இணைப்புகளில் மின் வினியோகத்தை துண்டிப்பதுடன், கட்டணத்தை விரைந்து வசூலிக்குமாறும் மின் வாரியம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதாவது, கிராமங்களில் தெரு விளக்கு, குடிநீர் வினியோகம் போன்ற சேவை பணிகளை ஊராட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்ததில் இருந்து, மின் கட்டணம் செலுத்த, 60 நாட்கள் அவகாசத்தை, மின் வாரியம் அளித்து வருகிறது.. அப்படி டைம் தந்தும்கூட, குறித்த காலத்தில் கட்டணம் செலுத்துவதில்லையாம்.. இதன்காரணம்க, 750 கோடி ரூபாய் அளவுக்கு இதுவரை மின் கட்டணம் நிலுவை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது..
இந்த கட்டணத்தையெல்லாம் விரைந்து செலுத்துமாறு, மின் வாரியம் எத்தனையோ முறை வலியுறுத்தியிருக்கிறது.. அப்படியும் கரண்ட் பில் கட்டவில்லை.. அதனால், மின் வினியோகம் துண்டிக்கும் நடவடிக்கையும் எடுக்கும் நிலைமை ஏற்பட்டது.
மின்கட்டணம்: இப்படி ஒரு சாட்டையை மின்துறை சுழட்டியதால் இப்போது என்ன நடந்தது தெரியுமா? 311 ஒன்றியங்களில் உள்ள, 2,345 ஊராட்சிகள், 5,346 மின் இணைப்புகளை செலுத்திவிட்டார்களாம்.. அதாவது, 200 கோடி ரூபாய் மின் கட்டணத்தை ஒரே தவணையில், மின் வாரியத்திற்கு செலுத்தி விட்டார்களாம்.. சபாஷ்..!!!
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications