Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேர்மை, ஊழல் ஒழிப்பு என படம் எடுத்த ஷங்கருக்கு ஷாக்! பணமோசடி தடுப்பு சட்டம்! சொத்துக்களை முடக்கிய ED

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், திரைப்பட இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

எந்திரன் திரைப்படத்தின் கதை தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Enforcement Directorate Shankar

தன்னுடைய திரைப்படங்களில் நேர்மை, ஊழல் ஒழிப்பு போன்ற கருத்துக்களை ஆழமாக சொல்லி வருபவர்தான் ஷங்கர். இந்நிலையில் இவர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

அதாவது ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துக்களை சென்னை மண்டல அமலாக்கத்துறை இயக்குநரகம் முடக்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி ஷங்கருக்கு எதிராக சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. வழக்கை தொடுத்தவர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன். அதாவது ஷங்கர் எடுத்த 'எந்திரன்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், ஷங்கர் கதை திருடிவிட்டார் எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

தமிழ்நாடன் 'ஜிகுபா' என்கிற கதையை எழுந்தியிருந்ததாகவும், அதனை திருடிதான் ரஜினியை வைத்து எந்திரன் என்கிற கதையை எடுத்ததாகவும் புகார் சொல்லப்பட்டிருந்தது. இதன் மூலம் பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் ஐபிசி, 1860 இன் கீழ் குற்றமிழைத்திருக்கிறார் ன்றும் தமிழ்நாடன் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) அறிக்கையை தமிழ்நாடன் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில், 'ஜிகுபா' கதைக்கும் எந்திரன் கதைக்கும் உள்ள ஒற்றுமைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

சரி இந்த குற்றச்சாட்டுக்கும் ஷங்கர் சொத்து முடக்கத்திற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா?

ஷங்கர் எந்திரன் கதையை எழுதியதாக சொல்லி அதற்காக ரூ.11.5 கோடி வரை ஊதியம் பெற்றிருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவேதான் தற்போது சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த படம் மொத்தமாக ரூ.290 கோடி வரை வசூல் செய்திருந்தது.

என்ன வாத்தியாரே இது? நீதி, நேர்மை, 5 ரூபாய் ஊழல் செஞ்சாலும் எண்ணெய் சட்டியில் போட்டு வறுக்கனும்னு படம் எடுத்துட்டு, இப்போது அமலாக்கத்துறையின் வறுவலுக்கு ஆளாகி இருக்கிறீயே? என ஷங்கரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+