தமிழ்நாட்டில் 30+ இடங்களில் அமலாக்கத்துறை பரபரப்பு ரெய்டு! ஜாபர் சாதிக் வீடு, புகாரி ஹோட்டலில் சோதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. புகாரி ஹோட்டல் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

போதை பொருள் மூலம் வந்த பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்திற்காக பிரதமர் சென்னை வரும் அதே நாளில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது.

ED raid around 35 locations in Chennai linked to JaffarSadiq amp amp NCB case

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து பல இடங்களில் முடக்கப்பட்ட உள்ளது. பல இடங்களுக்கு வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக 6வது முறையாக இன்று தமிழ்நாட்டிற்கு வருகிறார் பிரதமர் மோடி. சென்னை தியாகராயர் நகரில் வாகனப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்திற்காக 6வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளார். 2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் அவர், சென்னை, வேலூர், நீலகிரியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

இதே நாளில் சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். ஜாபர் சாதிக் தொடர்பான போதை பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.

கைது: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ரெய்டு நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து வந்த தகவலின் அடிப்படையில் என்சிபி அதிகாரிகள் நடத்திய சோதனையில் டெல்லியில் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவர் தான் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ரெய்டு நடத்தினர். வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகள் அளித்த தகவலின்படி நடந்த இந்த ரெய்டில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பிலான 50 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில்தான் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சென்னை அழைத்து வந்துள்ளனர். ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப் தடுப்பு பிரிவு அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் அடுத்தடுத்து சிக்கப்போகும் விஐபிக்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இவரிடம் விசாரணை நடக்கும் நிலையில்தான் சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது. போதை பொருள் மூலம் வந்த பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+