சரிகிறதா.. இல்லை.. கூடுகிறதா.. ஒரே குழப்பமா இருக்கே.. அங்கேதான் நிற்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
ஆட்சியை கலைக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் போடுவதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: நாள் ஆக ஆக எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு சரிவை நோக்கி செல்கிறதா அல்லது பலம் கூடி செல்கிறதா என்பது குழப்பமாக உள்ளது!
எப்படியும் மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் தேவை என்றாலும், கையில் உள்ளதோ 114தான். அதனால் 4 இடங்களில் மட்டும் ஜெயித்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கணக்கு!
மற்றொரு பக்கம், எம்எல்ஏக்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் இவர்களை தவிர அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு என மொத்தம் 6 பேர் ஆதரவா, எதிர்ப்பா என்று வெளிப்படையாக சொல்லாமல் குழப்பி அடிக்கிறார்கள். ஒருவேளை எதிராக போய்விட்டால், ஏற்கனவே 4 + 6 என்று 10 பேர் ஆதரவு எடப்பாடிக்கு தேவைப்படும். இது மற்றொரு கணக்கு.

கருணாஸ்
ஆனால் தனியரசு தவிர கருணாஸ், தமீமுன் அன்சாரி இவர்கள் இருவரும் எதிராக இருந்து இப்போது ஆதரவு என்கிறார்கள். கருணாஸ் எடப்பாடியை பேசாத பேச்சு இல்லை.. அன்சாரியோ திமுகவுக்கு ஆதரவு என்று ஓபனாகவே சொன்னவர்.. ஆனால் இப்போது எடப்பாடிக்குதான் ஆதரவு என்கிறார்கள்!

எடப்பாடி கணக்கு
தன் ஆட்சிக்கு ஆபத்து என்றாலும் எதற்காக 3 பேர் பதவி பறிப்பதில் எடப்பாடி தெளிவாக இருக்கிறாராம். அதே சமயம், ஆதரவு என்று சொன்னாலும், தன் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம். ஒருவேளை அவர்கள் 3 பேரும் எதிராக நின்றுவிட்டால், அந்த 3 இடங்களிலும் தனக்கு சாதகமான 3 பேரை நிற்க வைத்து வெற்றி பெற வைத்து தன் கைக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி கணக்கு போடுகிறாராம்.

ஆளுநர்
இது எல்லாவற்றையும் விட செம திட்டம் ஒன்று எடப்பாடி கையில் உள்ளதாம். அதாவது ஒருவேளை 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கவிழ்க்க ஏதாவது முயற்சி செய்தால், ஆளுநரிடம் தனக்கே பெரும்பான்மை இருப்பதாக சொல்லவும், அதனை நிரூபிக்கவும் ஆளுநரிடம் வாய்ப்பு கேட்கலாமா என்று யோசிக்கிறாராம்.

பிளஸ்தான்
ஏனென்றால், கூட்டணி கட்சியுடன் ஆட்சி அமைக்க எப்படியும் திமுக ஒத்துக்காது. தனித்து தான் ஆட்சி அமைக்க யோசிக்கும். அதனால் ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் முடிவு செய்தால்கூட, எடப்பாடிக்கு பிளஸ்தானாம்!












Click it and Unblock the Notifications