எடப்பாடி பழனிசாமி, சசிகலாவிடம் விசாரணையா?.. கொடநாடு வழக்கில் ஹைகோர்ட்டில் இன்று வழக்கு.. பரபப்பு
எடப்பாடி மற்றும் சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனு விசாரணைக்கு வருகிறது
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவிடம் விசாரிக்க கோரும் மனுவானது, இன்று ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி ஹைகோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடநாடு எஸ்டேட்டில் 2017, ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரைக கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக, ஷோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது...

விசாரணை
கடந்த மாதம், இந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்.பி. முரளி ரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர், நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

புதிய மனு
இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் ஹைகோர்ட்டில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

புலன் விசாரணை
அதில், இந்த வழக்கில் முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டதாக கூறப்பட்டது.. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் என்றும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை நடத்தாமல், முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது..

பேட்டி
இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி ,சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க கோரிய வழக்கில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.. இந்நிலையில் இன்று, எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை விசாரிக்க கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் வழக்கறிஞர் பேசும்போது சொன்னதாவது:

மனு தாக்கல்
"கொடநாடு நீதிமன்ற விசாரணை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.. அரசு தரப்பு வேண்டுதலுக்கிணங்க 3 வாரம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாயையும், சசிகலாவையும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எதிர்தரப்பினர் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர்.. அந்த தொடர்பான வழக்கு விசாரணையும் இன்று வரஉள்ளது" என்றார்.

டென்ஷன்
இதுதான் அதிமுக தரப்பில் பெரும் கலக்கத்தை தந்து வருகிறது.. காரணம், இந்த வழக்கில் தன் பெயர் சேர்க்கப்பட்டதை அறிந்ததில் இருந்தே எடப்பாடி பழனிசாமி டென்ஷனில் காணப்பட்டு வருகிறார்.. சட்டமன்றத்திலும் இதை பற்றி கேள்வி எழுப்பினால் கோபத்துடன் பதிலளித்தார்.. அப்படித்தான் முதல்வர் ஸ்டாலின் அவையில் பேசியபோது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

கேள்வி
"கோடநாடு விவகாரம் சாதாரண விசயமல்ல... முன்னாள் முதலமைச்சரின் முகாமாக இருந்த இடத்தில் நடைபெற்ற சம்பவங்களை எதில் சேர்ப்பது? கோடநாடு சம்பவம் நடந்த பிறகும் நீங்க தானே 4 ஆண்டுகள் முதல்வர்? அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன்? வழக்கை விசாரிக்க கூடாது என்று கோர்ட்டுக்கு எதுக்காக சென்றீர்கள்?" என்று ஸ்டாலின் கேட்டிருந்தார்.

எடப்பாடி
அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'கோடநாடு சம்பவம் நடைபெற்றவுடன் முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கிற்கு நாங்கள் தடை கேட்கவே இல்லை,.. நீதிமன்றத்தில் வழக்கு முறைப்படி நடைபெற்று வருகிறது. எங்களுக்கும் அந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்புமில்லை" என்று பதிலளித்திருந்தார்.

பதற்றம்
கொடநாடு வழக்கில் தம்மை சிக்க வைக்க சதி நடக்கிறது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளித்த நிலையில், சட்டசபையிலும் இதை பற்றி பேச அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கொடநாடு விவகாரத்தில் நேரடியாக விசாரணை நடத்தப்படுமோ என்ற பதற்றம் அதிமுக மேலிடத்தை கவ்வியுள்ளது.

விசாரணை
இதனிடையே, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஊட்டி கோர்ட்டில் சயான் ஆஜரானார்.. தனிப்படை ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ், விசாரணை அதிகாரி வேல்முருகன் நீதிமன்றம் வந்திருந்தனர.. தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வரும் விசாரணை பற்றிய அறிக்கையை இன்று தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஒத்திவைப்பு
ஆனால், வழக்கு விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 37 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது... அரசு தரப்பில் புலன் விசாரணைக்கு கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications