”ஒரே கல்லில் இரு மாங்காய்” மின் கட்டண உயர்வுக்கு எதிரான அதிமுக ஆர்ப்பாட்டம்.. களமிறங்கும் இபிஎஸ்!
சென்னை: மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பாக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கைகள் ஓங்கி உள்ளது. அதிமுகவை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள், பெரிதாக பலனளிக்கவில்லை. இபிஎஸ் தரப்பில் இருந்து ஒரேயொரு எம்எல்ஏ மட்டுமே ஓபிஎஸ் பக்கம் சென்றார். இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதேபோல் கட்சியின் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், வெற்றிபெற முடியவில்லை. இதனால் உற்சாகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சி ரீதியாக அடுத்தடுத்த பணிகளை தொடங்கியுள்ளார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இன்று முதல் 17ம் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டங்கள் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இபிஎஸ் ஆலோசனை
இந்த நிலையில் இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது நாளை திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த பேச்சுவார்த்தைகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரே கல்லில் இரு மாங்காய்
இது அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் என்பதை உறுதி செய்வதோடு, திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளையும், மாவட்டச் செயலாளர்களுக்கும் தொலைபேசி மூலம் வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றுப்பயணம்
இதுமட்டுமல்லாமல் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை பணிகளை முடித்துவிட்டு, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை அறியவும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
-
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications