Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”ஒரே கல்லில் இரு மாங்காய்” மின் கட்டண உயர்வுக்கு எதிரான அதிமுக ஆர்ப்பாட்டம்.. களமிறங்கும் இபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பாக நாளை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கைகள் ஓங்கி உள்ளது. அதிமுகவை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் எடுத்த முயற்சிகள், பெரிதாக பலனளிக்கவில்லை. இபிஎஸ் தரப்பில் இருந்து ஒரேயொரு எம்எல்ஏ மட்டுமே ஓபிஎஸ் பக்கம் சென்றார். இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதேபோல் கட்சியின் தலைமை கழக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கிலும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், வெற்றிபெற முடியவில்லை. இதனால் உற்சாகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சி ரீதியாக அடுத்தடுத்த பணிகளை தொடங்கியுள்ளார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் இன்று முதல் 17ம் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறுவதாக இருந்த பொதுக்கூட்டங்கள் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இபிஎஸ் ஆலோசனை

இபிஎஸ் ஆலோசனை

இந்த நிலையில் இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள வீட்டில் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது நாளை திமுக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த பேச்சுவார்த்தைகள் செய்யப்பட்டுள்ளன.

ஒரே கல்லில் இரு மாங்காய்

ஒரே கல்லில் இரு மாங்காய்

இது அதிமுக தொண்டர்கள் தங்கள் பக்கம் தான் என்பதை உறுதி செய்வதோடு, திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளையும், மாவட்டச் செயலாளர்களுக்கும் தொலைபேசி மூலம் வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சுற்றுப்பயணம்

சுற்றுப்பயணம்

இதுமட்டுமல்லாமல் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை பணிகளை முடித்துவிட்டு, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை அறியவும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+