ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இந்த தேர்தலில் தற்போதுவரை எடப்பாடி பழனிசாமி திட்டங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. விரக்தியில் அவர் ஜோதிடரிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதில் வழங்கப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் எடப்பாடி வியூகங்களை மாற்றி களத்தில் வேகம் காட்டவுள்ளாராம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. திமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி சவால்
தவெக வருகையால் திமுக அதிருப்தி வாக்குகள் பிரிந்து அதிமுக பாஜக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. திமுக 23 கட்சிகளுடன் பிரம்மாண்ட கூட்டணி அமைத்துவிட்டார். அதிமுகவில் எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருந்த தேமுதிகவை கூட தக்க வைக்க முடியவில்லை. ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் என பல சீனியர்கள் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர்.
செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்ட சிலர் தவெகவில் இணைந்துள்ளனர். அதிமுகவில் உள்கட்சி பிரச்சனையும் உச்சத்தில் இருக்கிறது. பாஜகவும் தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. கூட்டணி, தேர்தல் வாக்குறுதி என எடப்பாடி ஏவிய அம்புகள் எல்லாமே புஸ்வானமாகி வருகிறது.
ஜோதிடர்கள் அறிவுரை
இதில் விரக்தியான எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆஸ்தான ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை, வியூகங்களில் மாற்றங்களை செய்ய சொல்லி அட்வைஸ் செய்துள்ளார்களாம். அதனடிப்படையில் தான் அதிமுக ஆட்சி மன்றக் குழுவையும் மாற்றி அமைத்துள்ளாராம். எடப்பாடி தலைமையிலான குழுவில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பா.வளர்மதி, வேணு கோபால், ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, வளர்மதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. தம்பிதுரை தலைமையில் தேர்தல் பிரச்சார பணிகள் குழு, சி.விஜயபாஸ்கர் தலைமையில் தேர்தல் விளம்பர குழு, தங்கமணி, ஜெயகுமார் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
கண்டக சனி
தற்போது சனிப்பெயர்ச்சி முடிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு கண்டக சனி நடைபெற்று வருகிறது. இதனால் சிறிய தவறுகள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் ஜோதிடர்கள் ஆலோசனை ஏற்று வரும் நாட்களில் எடப்பாடியின் செயல்பாடுகளில் மேலும் பல மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு












Click it and Unblock the Notifications