அண்ணாமலைக்கு விரக்தி! அவரை அடையாளம் காட்டியதே அதிமுகதான்.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தேர்தலில் வெற்றி, தோல்வியை வைத்து எல்லாம் ஒரு கட்சியின் பின்னடைவாக பார்க்க முடியாது. தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி 8 முறை வந்திருந்தார். ரோடு ஷோ நடத்தப்பட்டது.

அமித்ஷா, ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் எல்லாம் வந்து பாஜகவுக்கு பிரச்சாரம் செய்தார்கள். அது போல் திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், இந்தியா கூட்டணி கட்சிக்காக ராகுல்காந்தி, திருமாவளவன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால் அதிமுக சார்பில் நான் மட்டுமே பரப்புரை செய்தேன். அது போல் தேமுதிக சார்பில் பிரேமலதா பரப்புரை செய்தார். இப்படியெல்லாம் நிறைய பேர் பிரச்சாரம் செய்தும் திமுகவின் வாக்கு சதவீதம் கடந்த 2019ஆம் ஆண்டைவிட இந்த முறை 6 சதவீதம் குறைந்துள்ளது.
அது போல் பாஜகவின் வாக்கு சதவீதம் 2014 ஆம் ஆண்டை விட 0.26 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அதிமுகவின் வாக்கு சதவீதம் கடந்த 2019ஆம் ஆண்டை விட தற்போது 1 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல்களில் அதிமுகவும் ,திமுகவும் மாறி மாறி வெற்றியையும் வீழ்ச்சியையும் சந்தித்துத்தான் வருகிறது.
சட்டசபை தேர்தல் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு, எனவே வரும் 2026 ஆம் ஆண்டு அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும். அதிமுகவின் வேட்டியை மாற்றிக் கொண்டு திமுகவின் கரை வேட்டியை கட்டிய அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.
எதிரிகளோடு சேர்ந்து குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கிறார். கடந்த தேர்தல்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் வாங்கிய ஓட்டுக்களை விட குறைந்த எண்ணிக்கையில்தான் அண்ணாமலை வாங்கியுள்ளார். அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுக. ஆனால் அவரோ அதிமுகவை லோக்சபா தேர்தலுக்கு பிறகு அழிந்துவிடும் என கூறியிருந்தார்.
இது போல் பலர் கூறியதை கேட்டு நாங்கள் இன்று வலுவாக இருக்கிறோம். அண்ணாமலையின் கனவு பலிக்காததால் எங்களை பற்றி விரக்தியில் பேசுகிறார். பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் 35 இடங்களில் வென்றிருப்போம் என்பதை நடந்து முடிந்ததை பற்றி பேசக் கூடாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்











Click it and Unblock the Notifications