ஒரு சொட்டு தேங்காதாம்.. குளத்தை பாருங்க.. திமுக அரசை விளாசிய எடப்பாடி.. கமல்ஹாசனுக்கும் ஒரு இடி!
சென்னை: ஒரு சொட்டு மழை நீர் தேங்காது என்றார்கள்; ஆனால் சென்னையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய கனமழை, சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்தையும் புரட்டிப் போட்டது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். மழை குறித்து வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்திற்கு முன்பு சொல்லியும் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டதாலேயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பால், உணவுப் பொருட்கள் போன்றவை மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என்றும் மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாத சூழ்நிலை இருக்கிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு துரித பணிகள் மேற்கொண்டதால் பாதிப்பு குறைந்தது. மேலும் எல்லா இடங்களிலும் அதிகாரிகளில் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய தலைமைச் செயலாளர் மழை பெய்த பின்னர் என்எல்சியிலிருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை கேட்டுள்ளதாக சொல்கிறார். இதிலிருந்தே தெரிகிறது அவர்களின் செயல்பாடு என்னவென்று.

மழை வெள்ள பாதிப்புகளுக்கு வடிகால் பணிகளை அதிமுக ஆட்சி காலத்திலேயே தொடங்கிவிட்டோம். அதன் பின்னர் இவர்கள் வந்து அதை தொடர்ந்தனர். தற்போது மழை நீர் வடிகால் பணிகள் சென்னையில் முடிந்ததாக சொல்லிவிட்டு தற்போது 51% மட்டுமே பணிகள் முடிந்திருப்பதாக சொல்வது ஏன்? 20 சென்டி மீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை நீர் தேங்காது என்று சொன்னார்கள். ஆனால் சென்னை முழுக்க குளம் போல் நீர் தேங்கி இருக்கிறது.
வானிலை ஆய்வு மையம் ஒரு வார காலத்திற்கு முன்பே எச்சரித்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்துள்ளோம். ழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, மழை பாதிப்பு குறித்து அரசை குறை சொல்லும் நேரம் இதுவல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "கமல்ஹாசன் ஒரு பச்சோந்தி போன்றவர், அவரை அரசியல்வாதியாக நான் மதிக்கவில்லை, அவர் கட்சியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை" எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications