Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு சொட்டு தேங்காதாம்.. குளத்தை பாருங்க.. திமுக அரசை விளாசிய எடப்பாடி.. கமல்ஹாசனுக்கும் ஒரு இடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு சொட்டு மழை நீர் தேங்காது என்றார்கள்; ஆனால் சென்னையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டிய கனமழை, சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டத்தையும் புரட்டிப் போட்டது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும், மழை வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

Edappadi Palanisamy slams dmk government on chennai flood

ஆலோசனைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான். மழை குறித்து வானிலை ஆய்வு மையம் ஒரு வாரத்திற்கு முன்பு சொல்லியும் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டதாலேயே வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் பால், உணவுப் பொருட்கள் போன்றவை மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என்றும் மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆகியும் மழைநீர் வடியாத சூழ்நிலை இருக்கிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு துரித பணிகள் மேற்கொண்டதால் பாதிப்பு குறைந்தது. மேலும் எல்லா இடங்களிலும் அதிகாரிகளில் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய தலைமைச் செயலாளர் மழை பெய்த பின்னர் என்எல்சியிலிருந்து அதிக திறன் கொண்ட மோட்டார்களை கேட்டுள்ளதாக சொல்கிறார். இதிலிருந்தே தெரிகிறது அவர்களின் செயல்பாடு என்னவென்று.

Edappadi Palanisamy slams dmk government on chennai flood

மழை வெள்ள பாதிப்புகளுக்கு வடிகால் பணிகளை அதிமுக ஆட்சி காலத்திலேயே தொடங்கிவிட்டோம். அதன் பின்னர் இவர்கள் வந்து அதை தொடர்ந்தனர். தற்போது மழை நீர் வடிகால் பணிகள் சென்னையில் முடிந்ததாக சொல்லிவிட்டு தற்போது 51% மட்டுமே பணிகள் முடிந்திருப்பதாக சொல்வது ஏன்? 20 சென்டி மீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு மழை நீர் தேங்காது என்று சொன்னார்கள். ஆனால் சென்னை முழுக்க குளம் போல் நீர் தேங்கி இருக்கிறது.

வானிலை ஆய்வு மையம் ஒரு வார காலத்திற்கு முன்பே எச்சரித்தும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்துள்ளோம். ழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

Edappadi Palanisamy slams dmk government on chennai flood

தொடர்ந்து, மழை பாதிப்பு குறித்து அரசை குறை சொல்லும் நேரம் இதுவல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "கமல்ஹாசன் ஒரு பச்சோந்தி போன்றவர், அவரை அரசியல்வாதியாக நான் மதிக்கவில்லை, அவர் கட்சியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை" எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+