அவர் அதிமுக வேட்பாளரே இல்ல.. கர்நாடகாவில் நடந்த ‘ட்விஸ்ட்’ ஷாக்.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு!
சென்னை : கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி வேட்பாளரின் வேட்பு மனுவை அதிமுக வேட்பாளர் என ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அன்பரசனை நிறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையின் போது, அவரது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் தனது தரப்பு வேட்பாளர்களை அறிவித்து இருந்தார். அதன்படி புலிகேசி நகர், கோலார், காந்திநகர் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து இருந்தார். புலிகேசி நகரில் நெடுஞ்செழியனும், காந்திநகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் : வேட்பு மனு பரிசீலனையின் போது புலிகேசி நகரில் நெடுஞ்செழியனின் மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத காரணத்தால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதேசமயம் காந்திநகரில் குமார், கோலார் தங்கவயலில் ஆனந்தராஜ் ஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
அதில் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் அதிமுக வேட்பாளர் எனக் குறிப்பிடப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளரை அதிமுக வேட்பாளராக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
எடப்பாடி அதிரடி முடிவு : இது தொடர்பாக அதிமுக சார்பில் எழுதியுள்ள கடிதத்தில், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வேட்பு மனுவை ஏற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு!












Click it and Unblock the Notifications