Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்!
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பில் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் இழுபறியாக நீடித்து வருகிறது. இந்நிலையில், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை போர்க் கொடி தூக்கி இருப்பது கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் எவ்வித சிக்கலும் இன்றி கூட்டணி முடிவுக்கு வரும் என்கின்றனர் திமுகவினர்.
திமுக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், முந்தைய தேர்தலை விட குறைந்த தொகுதிகளை ஏற்க வேண்டும் என்று திமுக தரப்பு வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் தொகுதிகளை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும் என திமுக தலைமையினர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

திமுக மார்க்சிஸ்ட் கூட்டணி
இந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களாக நடைபெற்றன. நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளை ஏற்க சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதே 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொள்ளுமாறு திமுக தரப்பு வலியுறுத்தியது. ஆனால் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகளை விட குறையாமல், அதற்கு மேலாக கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து வருகிறது.
சிபிஎம் 7 தொகுதி
பேச்சுவார்த்தையின் ஒரு கட்டத்தில், திமுக தரப்பு 6 தொகுதிகளை வழங்க தயாராக இருப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அதற்கும் மார்க்சிஸ்ட் கட்சி சம்மதிக்காமல் 7 தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலை தொடர்கிறது. இந்த சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு இந்த விவகாரத்தை கட்சியின் தேசிய தலைமையிடம் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுதி பங்கீடு
திமுக தரப்பின் உறுதியான நிலைப்பாட்டால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து தேசிய தலைமைக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு முன்பாகவே தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே நிலவுகிறது.
திமுக கூட்டணி
அதேநேரத்தில், இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், மாநிலக் குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மொத்தத்தில், திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நிறைவு பெற்றிருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடரும் இழுபறி முடிந்தால் தான் கூட்டணியின் இறுதி வடிவம் வரும் என்கின்றனர்.
கூட்டணி முடிவுக்கு வருமா?
திமுக கூட்டணி தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் நிலையில் இடையில் தேர்தல்கள் வந்த போதும் எந்தவித சிக்கல்கள் ஏற்படவில்லை, இந்த நிலையில் 2026 தேர்தலில் கூடுதலாக சில கட்சிகள் வந்துள்ளதால் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்கான தொகுதிகளை குறைப்பதை தவிர திமுகவுக்கு வேறு வழியில்லை. சில கட்சிகள் அதனை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் வாக்கு வங்கி, சட்டமன்ற உறுப்பினர்- எம்பிக்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை போர்க் கொடி தூக்கி இருப்பது கூட்டணிக்குள் சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் எவ்வித சிக்கலும் இன்றி கூட்டணி முடிவுக்கு வரும் என்கின்றனர் திமுகவினர்.
-
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
"எங்கிட்ட 300 ஓட்டு இருக்கு"..விசிக வேட்பாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த காங்கிரஸ் நிர்வாகி.. சர்ச்சை -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
விருத்தாசலத்திலிருந்து சட்டசபைக்கு செல்லும் பிரேமலதா? தேமுதிகவினருக்கு அண்ணியார் கொடுக்கும் பரிசு! -
மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.. சென்னையில் 3 நாட்களுக்கு தபால் வாக்கு சேகரிப்பு -
“பிரச்சாரம் ரத்து என்பதில் உண்மை இல்லை.. விஜய் 24 மணி நேரமும் களத்திற்கு ரெடி” - CTR நிர்மல் குமார் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
பெரம்பூரில் விஜயின் வெற்றிக்கு சிக்கல்.. தவெக சின்னம் விசிலா? கேமராவா? குழப்பிவிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி -
தவெக மீதான தாக்குதல்கள்: விஜய் ‘இமேஜை' பாதித்துள்ளதா? களம் சொல்வது என்ன?












Click it and Unblock the Notifications