மக்களே கவனம்.. ஊரகப் பகுதிகளில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதி
சென்னை: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் 388 ஊராட்சி ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தை விதி உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது.
இதனால் அரசின் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் உள்ளிட்ட எந்த சலுகைகளையும் கிராமப்புற மக்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஒப்புதல் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதி
ஊரக பகுதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் அதற்கான தேதிகளையும் இன்று காலை அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதி உடனடியாக கிராமப்புறங்களில் அமலுக்கு வந்துவிட்டது. இதனால் தேர்தல் அலுவலர்கள் அனுமதியின்றி பிரச்சாரம் உள்ளிட்ட செயல்களில் வேட்பாளர்கள் ஈடுபடக் கூடாது.

கிராமத்தலைவர்
தமிழகத்தில் 388 ஊராட்சி ஒன்றியத்தலைவர், 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 12,524 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தல் டிச.27, 30 என இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளார்கள்.

வேட்பாளர்
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் வீட்டுக்கு முன் நின்று பிரச்சாரம் செய்யக்கூடாது, பணமோ, பரிசுப்பொருட்களோ கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் நடத்தை விதியில் கூறப்பட்டுள்ளன.

கவனம் தேவை
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஜாதி, மதம், இனம் குறித்து விமர்சிக்கக் கூடாது, பரப்புரை செய்வதற்கும் வரம்பு நிர்ணயம் என பல்வேறு ஷரத்துகள் தேர்தல் நடத்தை விதிகளில் உள்ளன. நடக்கவிருக்கும் தேர்தல் கிராமப்புறங்களில் என்பதால் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் ஜாதி மதம் குறித்து விமர்சிக்கும் நிகழ்வுகள் நடக்கும் என்பதால், அதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கவனம் செலுத்துகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications