பரபரப்பு! அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் இ-பைக்குகள்! மாதவரத்தில் நடுரோட்டில் எரிந்த எலக்ட்ரிக் பைக்
சென்னை: மாதவரம் அருகே பேட்டரி மோட்டார் பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்னர், வேலூர் மாவட்டத்தில் இ-பைக் எனப்படும் எலக்ட்ரிக் பைக் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் துரைவர்மா மற்றும் அவரது மகள் மோகனப்ரீத்தி ஆகியோர் உயிரிழந்தனர்.

புனே சம்பவம்
இ-பைக்கை சார்ஜ் போடும் போது இரவு நேரத்தில் பைக் பேட்டரி வெடித்துள்ளது. இதனால் வீட்டில் கடும் புகை ஏற்பட்டுள்ளது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவரும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் கடந்த வாரம் புனேவில் ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ பைக் திடீரென தீ பிடித்தது. சாலையில் நின்று கொண்டு இருந்த போது, திடீரென பைக் தீ பிடித்தது.

ஒலா விளக்கம்
நல்வாய்ப்பாக பைக் தீ பிடித்து எரிந்த போது, அந்த பைக்கில் யாரும் இல்லை. பார்க் செய்யப்பட்டு இருந்த பைக் திடீரென தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் விபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து விரைவில் முடிவுகளை அறிவிப்போம் என்றும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து சீரியஸான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

மாதவரத்தில் பரபரப்பு
இந்தச் சூழலில் மாதவரம் அருகே பேட்டரி மோட்டார் பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூரைச் சேர்ந்தவர் கணேஷ் (21). கல்லூரி படித்து முடித்த இவர் திருவொற்றியூரில் உள்ள டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் இ பைக்கில் வேலைக்குப் புறப்பட்டு மாதவரம் 200 அடிச் சாலை மஞ்சம்பாக்கம் கொசப்பூர் அருகே வரும்போது பைக் இன்ஜினில் இருந்து லேசாகப் புகை வந்தது.

முற்றிலும் தேசம்
உடனடியாக கணேஷ் வண்டியை நிறுத்திவிட்டு சற்று தூரம் சென்று நின்று விட்டார். இதனைத் தொடர்ந்து மோட்டார் பைக் திடீரென்று கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த வழியாகச் சென்ற குடிநீர் லாரியை நிறுத்தி அதில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும், அதற்குள்ள இ பைக் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications