சென்னையில் வேற லெவலில் உயர்மட்ட மேம்பாலம்! அதுவும் 4 வழிச்சாலை.. பணி எப்போது தொடங்கும்.. இதோ அப்டேட்
சென்னை: சென்னை அண்ணாசாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் அண்மையில் வெளியான நிலையில், 4 வழிச்சாலையாக அமையும் இந்த மேம்பாலம் கட்டப்படும் பணிகள் எப்போது தொடங்கும் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. எந்த சாலைகளை பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து செல்வதை காண முடியும். அதுவும் பீக் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். சென்னையின் மையப்பகுதி என்று சொல்லக்கூடிய அண்ணா சாலையில் வரிசை கட்டி வாகனங்கள் நிற்கும்.

அதுவும் தேனாம்பேட்டை சிக்னலை தாண்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் மேம்பாலம் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையும் இந்த மாத துவக்கத்தில் வெளியிட்டப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த மேம்பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் ஜனவரி மாதம் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரூ. 621 கோடி மதிப்பில் தேனாம்பேட்டை -சைதாபேட்டை இடையே சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு உயர்மட்ட மேம்பாலமாக இது அமைகிறது. வரும் ஜனவரியில் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த மேம்பாலம் அமைக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பணிகள் தொடங்கும் போது அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஏற்கனவே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைந்துள்ள பகுதியிலேயே பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் நான்கு வழிச்சாலைகளாக இந்த மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணாசாலையை பொறுத்தவரை சென்னையின் இதயபகுதி என்று சொல்லலாம்.

பல்லவன் சாலை, சுவாமி சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பிளாக்கர்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை, பின்னி சாலை, ஸ்பென்சர் பிளாசா, ஒயிட்ஸ் சாலை, கிரீம்ஸ் சாலை, லாயிட்ஸ் சாலை, நுங்கம்பாக்கம் சாலை, தெற்கு உஸ்மான் சாலை, தி.நகர் தாலுகா அலுவலக சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, சர்தார் படேல் சாலை, கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் அண்ணா சாலையில் சந்திக்கின்றன.
எனவே 24 மணி நேரமும் போக்குவரத்து அதிகம் காணப்படும் பரபரப்பான இந்த சாலையில் அமைய இருக்கும் இந்த மேம்பாலம் வாகன ஓட்டிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். பாலம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்காது.. இதனால் பயணிகளின் நேரம் கணிசமாக மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா சாலையில் உயர்மட்ட மேம்பாலாமாக நான்கு வழிச்சாலையாக அமையும் இந்த மேம்பாலம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications