நடுவானில் யூடர்ன் போட்ட சென்னை விமானம்.. துபாயில் தரையிறங்க முடியாததால் மீண்டும் திரும்பியது!
சென்னை: மத்திய கிழக்கில் இப்போது போர் பதற்றம் நிலவும் சூழலில், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இப்போது, குறைந்த அளவில் விமானச் சேவை தொடங்கியுள்ள நிலையில், துபாய் நோக்கிச் சென்ற எமிரேட்ஸ் விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. அங்குக் கிட்டத்தட்ட ஒரு போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே அங்கு விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

விமானச் சேவை மொத்தமாக முடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிய பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர். இந்தச் சூழலில் தான் இன்று முதல் குறைந்த அளவில் விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி எமிரேட்ஸ் விமானம் இன்று காலை 3.50 மணிக்குச் சென்னையில் இருந்து துபாய்க்குப் புறப்பட்டது. 37 பயணிகளுடன் அந்த விமானம் துபாய்க்குச் சென்றது. இருப்பினும், அந்த விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. தரையிறங்க முடியாத சூழல் நிலவியதால், எமிரேட்ஸ் விமானம் சென்னை திரும்பியதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications