சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் ரூ.800 கோடி மதிப்புடைய ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் ரூ.800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை மாநகரம் விரிவடைய, விரிவடைய பல அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. 1975களில் இருந்த அரசு நிலங்களையும், இப்போது அரசு வசம் உள்ள நிலங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் அந்த வித்தியாசம் நிச்சயம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் சென்னையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் மிக அதிகம்.

குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளில் ஆறுகள், குளங்கள், ஓடைகள், நீர் வழித்தடங்கள், அரசின் நத்தம் புறம்போக்கு நிலங்கள் வேட்டையாடப்பட்டன. 2000த்திற்கு பிறகு ஐடி நிறுவனங்களின் வருகை மற்றும் அவற்றின் அசுர வளர்ச்சிக்கு வருகைக்கு பின்னர், சென்னையின் வளர்ச்சி மிக அசுர வேகத்தில் இருந்தது. புதிய தலைமுறை பட்டதாரிகள் பலர் ஐடி வேலைகளில் சேர்ந்தார்கள்.
அப்படி வேலைக்கு சேர்ந்த பலருக்கும் பல ஆயிரங்களிலும். லட்சங்களில் சம்பளம் வந்தது. இதனால் திடீரென சென்னைக்குள் நிலத்தின் தேவை பன்மடங்கு அதிகரித்தது. அதேபோல் சென்னைகுள்ளேயே வீடு வேண்டும் என மக்கள் விரும்பியதால், அடுக்குமாடி குடியிருப்புகளின் தேவை அதிகரித்தது. இதனால சென்னையின் மிகப்பெரிய அளவில் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்த அதேநேரம், ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன.
சென்னையின் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், நீர் நிலைகளை ஆக்கிரமித்தவர்கள், ஓடைகளை ஆக்கிரமித்தவர்கள் பலர் வீடுகளை கட்டினார்கள். சென்னையில் காணாமல் போன ஏரிகளின் லிஸ்ட் மிகப்பெரியது. இன்று உள்ள மிகப்பெரிய ஏரிகளின் பரப்பளவும் பாதிக்குமேல் சுருங்கி உள்ளது. சென்னையில் பல நீர் நிலை ஆக்கிரமிப்புகள் இப்போது முறைப்படுத்தப்பட்டு விட்டன.
ஆனால் சென்னையில் 2015 வெள்ளம் மிகப்பெரிய பாடத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தது. அதன் காரணமாக சென்னையில் நீர்நிலைகளில் வீடு கட்டியவர்கள், நீர் நிலை வழித்தடங்களை மறைத்து வீடு கட்டிய பலர் நொந்து போனார்கள். ஏனெனில் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவிற்கு சென்னை வெள்ளம் பேரழிவினை ஏற்படுத்தியது. அதன்பிறகே தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க முடிவு செய்தது.
2015க்கு பிறகு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு என்பது அப்படியே நின்றது. அதநேரம் ஏற்கனவே ஆக்கிரமித்தவர்களையும் வெளியேற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியது. சென்னையில் ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா வாங்குவது மிக கடினமான ஒன்றாக மாறி உள்ளது. ஆக்கிரமித்த பல ஆயிரம் கோடி நிலங்கள் சென்னையில் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளன.
சென்னையில் எம்எல்ஏ, எம்பி, அரசியல் பிரமுகர்கள், மிகப்பெரிய சங்கங்கள், செல்வாக்கான நபர்கள் என யார் ஆக்கிரமித்திருந்தாலும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.இதற்கு முக்கிய காரணம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த பல தீர்ப்புகள். ஆக்கிரமிப்பு நிலங்கள் எத்தனை வருடம் ஆனாலும், அவற்றை சீல் வைத்து அகற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்ததே உயர்நீதிமன்றம் தான். உயர்நீதிமன்றம் அளித்த பல்வேறு தீர்ப்புகளால் சென்னையில் இன்று ஆக்கிரப்பு நிலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசும், ஆக்கிரமித்தவர்களை அதிரடியாக வெளியேற்றி வருகிறது.
இந்நிலையில் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகில் ரூ.800 கோடி மதிப்புடைய 4.5 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை காரணமாக, அந்த நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்து இயங்கி வந்த, அரசுடைமை வங்கி, கிறிஸ்தவ மதப் பிரச்சார கூடம், வீடுகள் உள்பட 30 கட்டிடங்களுக்குச் சீல் வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications