Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவினில் ஆட்டம்.. பகலில் தூக்கம்.. உதயநிதியை இறங்கி அடிக்கும் எடப்பாடி.. தீவிரமான பர்சனல் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), ஆளும் திமுக அரசு மற்றும் அதன் தலைவர்கள் மீது முன்வைக்கும் கடுமையான தனிநபர் விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

படத்தில் ஒரு பாடல் இருக்கிறது.. இரவினில் ஆட்டம்.. பகலில் தூக்கம் என்று.. உதயநிதி ஸ்டாலின் அப்படித்தான் இருக்கிறார்.. இரவில் என்ன செய்கிறார்.. இரவில் ஆடுகிறார்.. பகலில் தூங்குகிறார்.. மக்களை பார்க்கமால் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி நேற்று நடத்த அதிமுக பிரச்சார கூட்டத்தில் பேசி உள்ளார்.

tamil nadu assembly elections 2026 dmk aiadmk

ஈரோடு பவானிசாகர் தொகுதி அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி தானாக அமைந்தது. இது வலிமையான கூட்டணி. திமுக - காங்கிரஸ் கூட்டணி இருப்பது சந்தேகம். காங்கிரஸ் ஆட்சியில் பங்கு தர வேண்டும், தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிடின் பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்பி ஒருவர் கூறியுள்ளார். காங்கிரஸ் - திமுக கூட்டணி கலக்கத்தில் உள்ளது. திமுக கெஞ்சிக்கொண்டு இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி - உதயநிதி ஸ்டாலின்

படத்தில் ஒரு பாடல் இருக்கிறது.. இரவினில் ஆட்டம்.. பகலில் தூக்கம் என்று.. உதயநிதி ஸ்டாலின் அப்படித்தான் இருக்கிறார்.. இரவில் என்ன செய்கிறார்.. இரவில் ஆடுகிறார்.. பகலில் தூங்குகிறார்.. மக்களை பார்க்கமால் இருக்கிறார்

இதெல்லாம் போக அவர் என்ன செய்கிறார்.. இன்ஸ்ட்டாகிராமில் ஆட்டம் போடுகிறார்.. அங்கே ஒரு விஷயத்திற்கு லைக் போடுகிறார்.. நான் சொல்லவில்லை.. நீங்களே என்ன செய்தார் என்று பாருங்கள்.. இப்படிப்பட்ட நபர் தமிழ்நாட்டிற்கு தேவையா ? இவரெல்லாம் துணை முதல்வராக இருக்க வேண்டுமா?,

எப்போது பார்த்தாலும் எடப்பாடி எப்படி வந்தான் தெரியுமா என்று கேட்பார்கள். நான் புகுந்து வந்தேன். பறந்து வந்தேன் என்பார்கள்.. நான் எப்படியோ வந்துவிட்டேன்ல.. நான் உழைத்து வந்தேன் என்று எடப்பாடி பழனிச்சாமி இறங்கி அடித்து ஆட தொடங்கி உள்ளார்.

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மீது தாக்குதல்

சமீபத்திய பொதுக்கூட்டங்களில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொள்கை ரீதியான விமர்சனங்களைத் தாண்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். "தனது கைகளை உயர்த்தினால் விரல்கள் நடுங்காது" என்று கூறியதன் மூலம் முதலமைச்சரை மறைமுகமாக அவர் கேலி செய்ததாக திமுகவினர் கொந்தளித்துள்ளனர்.

அதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் செயல்பாடுகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளையும் இபிஎஸ் கடுமையாகச் சாடியுள்ளார். உதயநிதி ஒரு "இன்ஸ்டாகிராம் முதலமைச்சர்" போலச் செயல்படுவதாகவும், மக்கள் பிரச்சனைகளை விட சமூக வலைதள மோகமே அவரிடம் அதிகமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

என்ன காரணம்?

எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னணியில் ஒரு அரசியல் கணக்கு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மற்றும் பாஜகவின் தீவிரமான செயல்பாடுகளால் அதிமுகவின் குரல் மங்கிவிடக்கூடாது என்பதற்காகவே, இபிஎஸ் இதுபோன்ற "பிளோ தி பெல்ட்" (Below the belt) தாக்குதல்களைக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செய்திகளில் தொடர்ந்து இடம்பிடிக்கவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் இபிஎஸ் இந்தத் தனிநபர் விமர்சன உத்தியைக் கையாள்கிறார்.. பிரச்சாரத்தை டிரெண்டாக்கவும் எடப்பாடி இப்படி செய்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

திமுகவின் பதிலடி

இபிஎஸ்-ஸின் இந்த விமர்சனங்களுக்கு திமுகவும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் முரட்டு அடிமை என்று உதயநிதி ஸ்டாலின் வர்ணித்துள்ளார். மேலும், சசிகலாவின் காலில் விழுந்த பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி, அதிமுகவின் சுயமரியாதை எங்கே போனது என்றும் திமுக தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+