திருமண விருந்தில் அதிமுக ஜெயகுமாரின் சாதுர்யம்.. மாஸ்க்கை எங்க வச்சிருக்காரு பாருங்க.. வேற லெவல்
சென்னை: சென்னை வேளச்சேரியில் ஒரு திருமண வீட்டிற்கு சென்ற முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்த ஒரு செயல் அனைவருக்கும் விழிப்புணர்வையும் முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தி தந்துள்ளது.
Recommended Video
கொரோனா பரவும் சூழலில் தற்போது எந்த ரூபத்தில் ஆபத்து வரும் என்றே சொல்ல முடியாததால் அனைவரும் தங்களை தற்காத்து கொள்ளவே பாடுபடுகிறார்கள். ஏனெனில் அந்த வைரஸின் பரவும் தன்மை அப்படியிருக்கிறது.!
அதிலும் பொது இடங்களில் கவனக்குறைவு ஏற்பட்டால் ஒருவர் செய்யும் தவறால் அங்குள்ள அனைவருக்குமே பாதிப்பு என்பதால் பொது இடங்களில் மிகவும் புத்திசாலித்தனமாகவும் மற்றவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் நாம் நடந்து கொள்வது மிக அவசியம்.

விழிப்புணர்வு
அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் அத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இவர் ராயபுரம் தொகுதியின் 5 முறை எம்எல்ஏவாக இருந்தவர். தற்போது நடந்த தேர்தலில் திமுக வேட்பாளரிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

உரிமைக் குரல்
பழகுவதற்கு மிக எளிமையானவர் என்பதால் அவரை கட்சியினர், அப்பகுதி மக்கள் தங்களில் ஒருவராகவே பாவிக்கிறார்கள். இதனால் எந்த எளிய தொண்டனின் திருமணமானாலும் அங்கு சென்று மணமக்களை வாழ்த்துவார்.

மாஸ்க்
அவ்வாறு வேளச்சேரியில் ஒரு திருமண வரவேற்பில் கலந்து கொண்ட ஜெயக்குமாரை அங்கிருந்தவர்கள் உணவு அருந்த அழைத்து சென்றனர். அப்போது அவர் மணமக்களுடன் உணவு அருந்த அமர்ந்தார். பந்தியில் இலை வைத்து உணவு பொருட்கள் பறிமாறப்பட்டது.

மாஸ்க்கை எங்கே வைப்பது என தவித்த முன்னாள் அமைச்சர்
அவர் உணவு அருந்த மாஸ்கை கழற்றிய போது வேட்டி அணிந்து வந்ததால் பாக்கெட்டில் வைக்க முடியாமல் சற்று நேரம் தவித்தார். பயன்படுத்திய மாஸ்க்கை உணவு அருந்தும் டேபிளிலும் வைக்கக் கூடாது. இப்படியே பரபரப்பாக அங்கேயும் இங்கேயும் பார்த்தவர், உடனடியாக தனது சட்டை பட்டனில் மாஸ்க்கை மாட்டி தொங்கவிட்டார். இதையடுத்து அவர் உணவு அருந்த தொடங்கினார்.

நீங்க வேற லெவல்
இது பார்ப்பதற்கு சாதாரண விஷயமாக தெரியும். ஆனால் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பிசிறு தட்டாமல் பின்பற்றியுள்ளார். இவர் நினைத்திருந்தால் மாஸ்க்கை தனது உதவியாளரோ, கட்சியினரிடமோ, திருமண வீட்டாரிடமோ கொடுத்திருக்கலாம். ஆனால் அங்குதான் இவர் பொறுப்பான குடிமகனாக நடந்து கொண்டார். பயன்படுத்திய மாஸ்க்கை மற்றவர்களிடம் கொடுத்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டார். மேலும் மாஸ்க்கை டேபிளில் வைத்தால் அந்த டேபிளை கொரோனா பாதித்தவர் தொட்டிருந்தால் அதனால் அவருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சுருக்கமாக சொல்ல போனால் கொரோனாவால் நாமும் பாதிக்கக் கூடாது, நம்மால் மற்றவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மிகவும் உஷாராக இருந்தார் ஜெயக்குமார்! நிச்சயம் இது வேற லெவல்!
-
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications