எம்ஆர்சி நகர் ஹோட்டல் டூ சொகுசு ரிசார்ட் வரை.. சித்ராவுக்கு செக்ஸ் டார்ச்சர் தந்தாரா மாஜி அமைச்சர்?
சென்னை: சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல ஹோட்டல் முதல் பூந்தமல்லி சொகுசு ஹோட்டல் வரை சின்னத்திரை நடிகை சித்ராவின் வாழ்வில் நடந்த திடீர் திருப்பங்கள் என்னென்ன?
சின்னத்திரை சித்ரா, தன்னை இகழ்ந்தோர் முன்பு நன்கு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற ஒரு துடிப்புடன் முன்னேறி வந்தார். குறுகிய காலத்தில் நிறைய பணம் சம்பாதித்தார். கடும் உழைப்பாளி என நண்பர்கள் வட்டாரத்தில் அறியப்படுகிறார் சித்ரா.
அப்படிப்பட்ட சித்ரா பூந்தமல்லியை அடுத்த பிளசென்ட் டேஸ் ஹோட்டலில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் சித்ராவுக்கு சிலர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஹேமந்த் தனது விசாரணையில் பகீர் தகவலை அளித்துள்ளார்.
'கழுத்தில் பதிந்த பல்’ மாஜியும் இல்ல மாண்புமிகுவும் இல்ல! நடிகை விஜே சித்ரா மரணத்தில் விலகாத மர்மம்!

சித்ரா மரணம்
அது போல் சித்ரா மரணத்தில் ஹேமந்துடன் மேலும் 4 பேருக்கு தொடர்பிருப்பதாகவும் சித்ராவின் தோழி ரேகா நாயர் தெரிிவத்துள்ளார். சித்ராவுக்கு நிறைய ஆண்களுடன் தொடர்பிருந்ததாகவும் ரேகா தெரிவித்துள்ளார். சித்ராவும் ஹேமந்தும் கணவன் மனைவியாக பதிவு திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்தனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா
அந்த வீட்டில் நிறைய ஆணுறைகள் இருந்ததை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். கணவன் மனைவியாக வாழும் இவர்களுக்கு எதற்கு ஆணுறை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார். சித்ராவும் ஹேமந்தும் கணவன் மனைவியாக இருந்தாலும் குழந்தை பிறப்பை தள்ளி போட ஆணுறைகளை பயன்படுத்தியிருக்க வாய்ப்பிருக்கிறது.

ஆணுறைகள் எதற்கு
இல்லாவிட்டால் அந்த ஆணுறைகளை ஹேமந்த், சித்ராவுக்கு தெரியாமல் வேறு பெண்களுடன் சுற்றுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்ற கோணமும் இருக்கிறது. மேலும் சித்ராவுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த நபர்களிடம் பணத்தை பெற்றுக் கொணடு சித்ராவை அவர்களுக்கு விருந்தாக்க நினைத்து ஆணுறைகளை ஹேமந்த் வாங்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

மாஜி அமைச்சர்
இந்த நிலையில் மாஜி அமைச்சர் ஒருவர் சின்னத்திரை விருது வழங்குவது தொடர்பாக பேசுவதற்காக சென்னையில் எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு சித்ராவை வரவழைத்ததாக தெரிகிறது. அங்கு சித்ராவும் அந்த மாஜியும் அறிமுகம் செய்து கொண்டதிலிருந்து சித்ரா மீது மாஜிக்கு ஒரு கண் என்றும், எப்படியாவது அவரை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகவும் புலனாய்வு நாளிதழ் கூறுகிறது.

சித்ராவுக்கு செக்ஸ் டார்ச்சர்
இந்த லட்சியத்தை எட்டுவதற்காக சித்ரா கடைசியாக தங்கியிருந்த பூந்தமல்லி ஹோட்டலுக்கும் அந்த மாஜி அமைச்சர் வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாஜி மூலம் சித்ராவுக்கு செக்ஸ் டார்ச்சர் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதனால் இனி அவர்களுடனான தொடர்பை சித்ரா துண்டித்ததால் குண்டர்களை விட்டு சித்ரா கொலை செய்யப்பட்டிருக்கலாம். இல்லாவிட்டால் தொடர் டார்ச்சரால் சித்ராவே தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கலாம் என்றும் இருவேறு தகவல்கள் வருகின்றன. எது எப்படியிருந்தாலும் தற்கொலைக்கு தூண்டியவர்களும் குற்றவாளிகளே என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்கின்றன.