ரயில் டிக்கெட் புக் பண்ணப் போறீங்களா.. முதல்ல இதை பாருங்க.. சென்னையில் இப்படியும் மோசடி
சென்னை: ரயில் டிக்கெட் புக் செய்யும்போது இனி ரொம்பவே பார்த்துதான் செய்ய வேண்டும் போல.. ஏனெனில் அதிலும் முறைகேடு வந்துள்ளது. அதுவும் சென்னையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
Recommended Video
சென்னை தண்டையார்பேட்டையில் இயங்கிவரும் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்புப் படை அதிகாரிகளுக்கு ரயில் போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்வது தொடர்பாக தென்னக ரயில்வே சென்னை கோட்ட ரயில்வே முதன்மை ஆணையர் செந்தில் குமரேசனுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, திருவொற்றியூர் பகுதியில் அமைந்துள்ள மைக்ரை டிராவல்ஸ் என்ற தனியார் ஏஜென்சி நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையில் 15க்கும் மேற்பட்ட நபர்களுடைய முகவரியை வைத்து போலியான சுமார் 1500 இ- டிக்கெட்டுகள் இதன் மதிப்பு 15 லட்சம் ரூபாய் இதனை ரயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கள்ளச்சந்தையில் போலியான ரயில்வே இ - டிக்கெட்டுகளை விற்பரனை செய்தது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வினோதன் மற்றும் ஊழியர் ஹரிஹரன் உள்ளிட்ட 2 பேரை கைது செய்து அவரிடமிருந்து 15000 போலியான இ-டிக்கெட்டுகள் மற்றும் இரண்டு கணினி, இரண்டு செல்போன் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
இரண்டு குற்றவாளிகளையும் ரயில்வே சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த மூன்று மாதங்களில் இது போன்று கள்ளச்சந்தையில் போலியான ரயில் இ -டிக்கெட்டுகள் விற்பனை செய்த நபர்கள் சுமார் 50 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போலியான ரயில்வேயை இ- டிக்கெட்டுகளை ரயில்வே தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
ரயில்வே வரலாற்றில் ரூ.100 கோடி மெகா அசுர வருவாய்! வியக்க வைத்த கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications